ஈரோடு, டிச. 28- ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சசி மோகன் மேற்பார்வையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமை வகித்தனர். ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களில் காவல் துறை தலைமையிடம், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு ஆகிய அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட புகார் மனுக் கள் மற்றும் பொதுமக்கள்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது ஏற்கனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவ்விசாரணையில் திருப்தி ஏற்படாத மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை மாவட்ட காவல் அலுவலக கூட்ட ரங்கிற்கு நேரில் வரவழைக்கப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை உட்கோட்டங்கள் ரீதியாக தனித்தனியாக நேரங்கள் ஒதுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்களை உடன் வைத்து, நேரடியாக மறுவிசாரணை செய்யப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய புகார்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க தீர்வு காணப்பட்டது. இதர மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கோ அல்லது நீதிமன்றங்கள் மூலம் தீர்வு பெற்று கொள்ள அறிவுறுத் தப்பட்டது. இம்முகாமில் 75 மனுக்கள் பெறப்பட்டு, 39 மனுக் களுக்கு உண்டான சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.