districts

img

விநாயகர் கோவில் கமிட்டி சார்பில் பக்ரீத் வாழ்த்து

திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் ஊராட்சி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், ஸ்ரீசெல்வா விநாயகா கோவில் கமிட்டி சார்பில், திங்களன்று இஸ்லாமிய சகோதரர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்து அன்பை பரிமாறிக் கொண்டனர். இங்குள்ள பெரிய பள்ளிவாசலுக்கு இந்து சகோதரர்கள் வருகை தந்து, பள்ளிவாசல் நிர்வாகிகளை சந்தித்து ரோஜாப்பூ வழங்கி, இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர். இச்சம்பவம் மூலம் தமிழ்நாடு மதச்சார்பின்மை வாய்ந்த மாநிலம் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.