districts

img

மயானம் ஆக்கிரமிப்பு: கோட்டாட்சியரிடம் புகார்

நாமக்கல், டிச.8- திருச்செங்கோடு அருகே  மயானத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் கோட்டாசியரிடம் அப்பகுதியினர் புகார் அளித் தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே சக்கரம்பாளையம் அருந்ததியர் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், எலச்சிபாளையம் பிரதான சாலையில், கொண்னையார் பாலம் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மயா னத்தில், இறந்தவர்களின் உடல்களை அடக் கம் செய்து வந்தனர். இந்நிலையில், மயானத்திற்கு அருகா மையில் உள்ள விவசாயத் தோட்டத்தை, ஒரு வர் விலைக்கு வாங்கிய பிறகு, அருகே உள்ள  மாயனத்தையும் ஆக்கிரமிப்பு செய்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இந்நிலையில், நியாயம் கேட்டு திருச் செங்கோடு வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து அப்பகுதி பொதுமக்கள், புகார்  மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட  அதிகாரி உரிய விசாரணை செய்வதாக உறுதி யளித்தார். பின்னர் திருச்செங்கோடு வட்டாட் சியர் விஜயகாந்த்திடமும் கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக, சக்கராம்பாளையம் ஊர் தர்மகர்த்தா ஆர்.நல்லமுத்து தலைமையில், சிபிஎம் எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சி லர் சு.சுரேஷ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.