வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி
கோபி, ஜன.25- கோபி வட்டாச்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்கா ளர் தினத்தையொட்டி சார் ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது ஈரோடு மாவட்டம், கோபி வட்டாச்சியர் அலுவல கத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வுப் பேரணி சனி யன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோபி சார் ஆட்சி யர் சிவானந்தம் கலந்து கொண்டு வாக்காளர் உறுதி மொழி ஏற்று விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கி வைத்தார். தாலுகா அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி கச்சேரிமேடு, தினசரிசந்தை, அண்ணாபாலம், பேருந்து நிலையம் வரை வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் வட்டாச்சியர் சரவணன், மண்டல துணை வட்டாச்சியர் மணிமேகலை, வருவாய்துறை ஆய்வாளர் கோபால்சாமி, மற்றும் வருவாய்துறை யினர், காவல்துறையினர், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். இதேபோன்று கோவை, நீலகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.
குடிசை வீட்டில் தீ விபத்து: பெண் பலி
நாமக்கல், ஜன.25- குமாரபாளையம் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள ரங்கனூர், கட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் கஸ்தூரி என்ற சரஸ்வதி (43). இவர் கணவனை பிரிந்து தனது தந்தைக்கு சொந்த மான குடிசை வீட்டில் வசித்து வந்தார். நூற்பாலைக்கு கூலித் தொழிலாளியாக சென்று கொண்டிருந்தவர், தற் பொழுது அப்பணிக்கு செல்லாமல் கால்நடைகளை சொந்தமாக வாங்கி அதனை மேய்த்து அதில் வரும் வரு மானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில், சனியன்று அதிகாலை தேநீர் வைப்பதற்காக வீட்டின் முன்பிருந்த விறகு அடுப்பை பற்ற வைத்த பொழுது, எதிர்பாராத விதமாக குடிசை வீட்டின் முன் பகுதியில் தீ பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி அருகி லிருந்த தனது தந்தை பெருமாளை எழுப்பியுள்ளார் அவர் எழுந்து வருவதற்குள் தீமளமளவென பரவிய தால் வீட்டில் உள்ள பொருட்களை மீட்பதற்காக சரஸ் வதி வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனை அறியாத பெரு மாள் தனது மகள் அக்கம் பக்கத்திலுள்ளவர்களை அழைக்க சென்று இருப்பார் என நினைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வெப்படை தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதன்பின் வீட்டிற்குள் சென்று பார்த்த பொழுது உடல் கருகிய நிலையில் சரஸ்வதி சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து வெப் படை காவல் துறையினர் சடலத்தை மீட்டு குமாரபாளை யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
கடன் வாங்கித் தருவதாக மோசடி பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்
தருமபுரி, ஜன.25- மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் வாங்கித் தருவ தாக ரூ.2.25 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது பாதிக் கப்பட்ட பெண்கள், கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ளது போளையம்பள்ளி கிராமம். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ரேகடஅள்ளி கிரா மத்தைச் சேர்ந்த சுபா, சிந்தல்பாடி அருகே உள்ள சூரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அபிராமி ஆகியோர், மகளிர் குழு நடத்தி வரும் பெண்களுக்கு வங்கியிலி ருந்து கடன் பெற்று தருவதாகக்கூறியுள்ளனர். மேலும், ஒவ்வொரு பெண்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் கடன் உதவி வாங்கித் தருவதாக தெரிவித்து, ஒவ்வொருவரி டமும் ரூ.4,400 பெற்றுக் கொண்டனர். ஐந்து குழுவைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பெண்களிடம் ரூ.2.25 லட்சம் வசூலித்து சென்றனர். ஆனால், கூறியபடி வங்கியி லிருந்து எந்தவொரு கடன் உதவியும் வாங்கித்தர வில்லை. இதுகுறித்து முன்பணம் பெற்றுச் சென்ற பெண்களிடம் கேட்டபோது சரியான பதில் இல்லை. எனவே, மோசடியில் ஈடுபட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் வழங்கிய பணத்தை மீட்டுத்தர வேண் டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் கம்பை நல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
நெல் விளைச்சல் போட்டி
கோபி, ஜன.25- கோபி அருகே வேளாண்மைத்துறை சார்பில் பாரம் பரிய நெல் விளைச்சல் போட்டி நடைபெற்றது தமிழகத்தில் பாரம்பரிய நெல் சாகுபடியில் மாநில அளவில் அதிக மகசூல் செய்யும் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசனப் பகுதியில் பல விவசாயிகள் பாரம்பரிய நெற் பயிர் விளைச்சல் போட்டிக்கு விண்ணப்பித்து, பதிவு செய்த விவசாயிகளில் கோபி அருகே உள்ள நாக தேவம்பாளையத்தில் செங்கோட்டையன் என்பவரது வயலில் சாகுபடி செய்யப்பட்ட “தூயமல்லி” என்ற பாாரம்பரிய நெல் ரகம் பயிர் விளைச்சல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. சென்னை வேளாண்மை இயக் குநரின் பிரதிநிதியாக திருப்பூர் வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரவடிவேல், ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி ஆகியோர் கொண்ட நடுவர்குழு முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டது. வயலில் கிடைத்த மகசூல் கணக்கீடு செய்யப்பட்டு அதன் விவரங்களை சென்னை வேளாண்மை இயக்கு நர் அலுவலகத்திற்கு அனுப்பிப் பரிசீலிக்கப்படும். இறுதியில் இந்தாண்டு மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திறந்தவெளி பாராக மாறியப் பேருந்து நிலையம்
தருமபுரி, ஜன.25- அரூர் பேருந்து நிலையம் திறந்தவெளி பாராக மாறி வருவதால், பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரில் பேருந்து நிலையம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தினந்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லக்கூடிய பேருந்து நிலையமாக உள்ளது. இந்த பேருந்து நிலை யத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வரு கின்றனர். இரவு நேரங்களில் பேருந்து பயணி கள் குடிநீர் குழாய் பகுதியிலுள்ள காலியி டங்களில் சிறுநீர் கழித்து செல்கின்றனர். இத னால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லா மல் பெண்கள், குழந்தைகள் என அனைவ ரும் முகம் சுழித்துச் செல்லக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீர் குழாயில் தண்ணீரை பிடித்து மதுபாட்டிலில் கலந்து அங்கேயே குடித்து, பாட்டில்களை வைத்து விட்டு செல்கின்றனர். எனவே, சிறுநீர் கழிப் பதற்கும், குடிநீர் அருந்துவதற்கும் சரியான இடத்தை தேர்ந்தெடுத்து, மக்கள் பயன்படுத் தும் வகையில் பேருந்து நிலையத்தில் பாது காப்பான இடத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும், என பயணிகள் வலியு றுத்தியுள்ளனர்.
இடிந்து விழும் நிலையிலுள்ள அங்கன்வாடி கட்டடம்
பொள்ளாச்சி, ஜன.25- பொள்ளாச்சி நகரத்திற்குட்பட்ட அமைதி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர அப் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ள னர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியின் 36 ஆவது வார்டு அமைதி நகரில், அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. 20 க்கும் மேற்பட்ட குழந்தை கள் இம்மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேற்கண்ட அங்கன்வாடி மையம் அமைந்துள்ள கட்டிடம் கட்டப் பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டதால் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு சுவர்ளிலும் கான்கிரீட் பெயந்து விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள் ளது. மேலும், சுற்று சுவர்களில் குறிப் பாக கட்டிடத்தின் பின்பகுதியின் கீழ் புறம் விரிசல் ஏற்பட்டு இடிந்து போகும் நிலையில் உள்ளது. மேலும், இக்கட்டி டத்தில் கழிப்பறை வசதி ஏதுமில்லை. எனவே, இங்கிருந்து அங்கன்வாடி மையத்தை வேறு ஒரு கட்டிடத்திற்கு தற்காலிகமாக மாற்றிவிட்டு புதிய அங் கன்வாடி மையம் அமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ள னர். ஆபத்தான நிலையில் உள்ள இந்த அங்கன்வாடி கட்டத்தை அகற்றிவிட்டு, புதிய அங்கன்வாடி கட்டடம் கட்ட வேண் டும் என நகராட்சி ஆணையர் மற்றும் சார் ஆட்சியர் ஆகியோரிடம் பொதுமக் கள் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு அளிக் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சைபர் பள்ளிக்கூடம்: புதிய திட்டம் தொடக்கம்
உதகை, ஜன.25- நீலகிரியில் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சைபர் பள்ளிக்கூடம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கணினி அல்லது இணைய சேவை மூலம் நடைபெறும் குற்றங்கள் அனைத் தும் சைபர் குற்றங்களாகும். ஆரம்பத் தில் வங்கியில் இருந்து பேசுவதாகவும், ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்குமாறும் கூறி மோசடி செய்தனர். தற்போது புதிய, புதிதாக மோசடிகளை அரங்கேற்றி வரு கின்றனர். இந்நிலையில், சைபர் குற்ற வழக்கு விசாரணையில் நாடு முழுவதும் ஒருங்கிணைப்பு தேவை என்பதற்காக இந்தியா 8 மண்டலங்களாக பிரிக்கப் பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு, கேர ளம், கர்நாடகா ஆகியவை தென் மண்ட லத்தில் உள்ளது. இதேபோல் சைபர் குற்றங்கள் குறித்து மாணவ-மாணவிக ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் சைபர் கிளப் தொடங்க அறிவுறுத்தி யது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சைபர் கிளப் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டு, அதில் ஆன்லைன் மோசடி குறித்து தகவல்கள் அனுப்பி விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்படுகிறது. இருப்பினும், குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே நீலகிரியில் தற்போது புதிதாக சைபர் பள்ளிக்கூடம் என்ற புதிய திட் டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை முகநூல் நேரலை நிகழ்ச்சி மூலம் சைபர் கிரைம் குறித்து ஒவ்வொரு வாரமும் துறை வல்லுநர்கள் பொது மக்களுக்கு விளக்கம் அளிப்பார்கள். அப்போது பொதுமக்கள் கேட்கும் சந் தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப் படும். இதுகுறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கூறியதா வது, நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் துறை சார்பில் இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. பள்ளி கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்கு எந்த சந்தே கம் என்றாலும் இதில் தொடர்பு கொள் ளலாம். சமூக வலைதளங்களில் தனிப் பட்ட தகவல்களை பகிர வேண்டாம். ஓடிபி உள்ளிட்ட தகவல்களை யாருக் கும் சொல்ல வேண்டாம். அறிமுகம் இல் லாத நபர்களிடம் வீடியோ கால் பேச வேண்டாம். சமீபகாலமாக டிஜிட்டல் கைது என்று கூறி வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி ஆசாமிகள் தங்க ளுடைய வங்கி கணக்குக்கு மாற்றி ஏமாற்றுகின்றனர். டிஜிட்டல் கைது என்று கூறி போலீசார் ஒருபோதும் இந்த வகையில் தொடர்பு கொள்ள மாட்டார்கள். மேலும் சைபர் குற்றங்கள் மூலம் பணம் இழப்பு ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலை தள முகவரி https://cybercrime.gov.in யில் உடனடியாக புகார் அளிக்க வேண் டும், என்றார். அப்போது அவருடன் கூடு தல் காவல் கண்காணிப்பாளர் மணி கண்டன், துணை காவல் கண்காணிப் பாளர் நவீன், சிறப்பு பிரிவு ஆய்வாளர் சுஜாதா உள்பட பலர் இருந்தனர்.
மருந்து நிறுவனங்களில் திடீர் வேலை நீக்கம்: கண்டனம்
ஈரோடு, ஜன.25- மோடி அரசின் கார்ப்பரேட் ஆத ரவு கொள்கையால் மருந்து நிறுவ னங்களில் அதிகப்படியான வேலை நீக்கம் நடைபெறுவதை மருந்து மற் றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மருந்து மற்றும் விற் பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் ஈரோடு கிளையின் ஆண்டு பேர வைக் கூட்டம் வியாழனன்று வி.பி.சிந் தன் நினைவு அரங்கத்தில் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு தலைவர் சுரேஷ் பாபு தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் நாரா யணசாமி, மாநிலக்குழு உறுப்பினர் கள் கார்த்திகேயன், செந்தில்குமார் மற்றும் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ரகுராமன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இக்கூட்டதில், மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு, தமிழ் நாடு அரசாணைப்படி, குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். 8 மணி நேர வேலை நேரத்தை நிறுவனங்கள் அவசியம் அமல்படுத்த வேண்டும். மருந்து கம்பெனி கார்ப்பரேட்டுக ளுக்கு சாதகமான மோடி அரசின் சட்டங்கங்களால், தவறான - தொழி லாளர் விரோதக் கொள்கையால், கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள் அதிகப்படியான திடீர் வேலை நீக் கங்களை செய்து வருகிறது. இத்த கைய ஆட்குறைப்பு அடாவடி நடவ டிக்கைகளுக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதில், செயலாளர் மு.சங்கரன், இணைச் செயலாளர் கவின்குமார், பொருளாளர் கோபிநாத் மற்றும் மூத்த நிர்வாகிகள் இரண்டு பேருக்கு பணி நிறைவுப் பாராட்டு விழா நடை பெற்றது.
அதிகாரிகளின் தொடர் அலட்சியம்
அதிகாரிகளின் தொடர் அலட்சியம் கோபி, ஜன.25- கோபி, டி.என்பாளையம் சாலையில், எச்சரிக்கை சின்னங் கள் இல்லாததால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. அதி காரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள டி.என்பாளை யம் பேரூராட்சி தமிழ்நகர் பகுதியில் சத்தி - அத்தாணி நெடுஞ்சாலை உள்ளது. இங்கு குடியிருப்பு பகுதிகளில் எச்ச ரிக்கை சின்னங்கள் இல்லாததால், இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சாக்கடை கழிவுநீர் செல்லும் ஆழமான வடிகாலில் வாகனங்களுடன் தலைகீழாக விழுந்து காயம் அடைகின்றனர். இப்பகுதிகளில், எச்சரிக்கை சின்னங்களை வைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி யும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சி யப்படுத்துவதாக இப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், இப்பகுதியில் பல மாதங்களாக எரியாமல் உள்ள மின்விளக்கை சரி செய்ய வேண்டியும் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வாணிப்புதூர் பேரூராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
பாதுகாப்பு அலாரம் – எஸ்பி விளக்கம்
பாதுகாப்பு அலாரம் – எஸ்பி விளக்கம் கோவை, ஜன.25- கோவை புறநகரில் உள்ள தோட்டங்களில் வசிப்பவர் களுக்கு, பாதுகாப்பு அலாரத்தை பயன்படுத்துவது குறித்து கிராம மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கினர். கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள தோட் டங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான குழு, சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள பண்ணை வீடுக ளில் விழிப்புணர்வு முகாமை நடத்தியது. அப்போது காவல் கண்காணிப்பாளர், கார்த்திகேயன், தோட்டங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவ தன் மூலம் மற்றும் அலாரம் அமைப்புகளை பயன்படுத்து வதன் மூலம் தங்களை பாதுகாக்க முடியும். மேலும், சந்தேகத் திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருப்பின் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காணாமல் போன ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கை (FIR) விபரங் களை அறிந்து கொள்ளலாம். கூகுள் பிளே ஸ்டோரில் “Kaaval Uthavi” என தேடி இச்செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம், என்றார்.
ஆண்டிபாளையம் குளத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை
ஆண்டிபாளையம் குளத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை திருப்பூர், ஜன.25 - திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தின் கரைகளை பலப்ப டுத்த வேண்டும் என்று மங்கலம் கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் சி. பொன்னுசாமி கூறி யுள்ளார். வெள்ளியன்று திருப்பூர் வருவாய் கோட்ட விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில் அவர் இதுகுறித்து மனு கொடுத் தார். ஆண்டிபாளையம் குளத்தில் நீர் நிரம்பி உள்ளதால் சுற்று வட்டார விவசாயிகளுக்கு கிணற்றில் நீர் நிரம்பி உள்ளது. அத் துடன் குள்ளே கவுண்டன் புதூர் கோழிப் பண்ணை எஸ் ஆர் நகர் பாரப்பாளையம், ஆண்டிபாளையம் வரை வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணற்று நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. எனவே மக்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில் குளத்தின் கரைப்பகுதி ஏரி கல்வெட்டு பகுதியில் சீமை கருவேல மற்றும் பிற மதங்களின் வேர்கள் படர்ந்து ஏரியை பலவீனப்படுத்தி உள்ளது. ஆகவே உடனடி யாக ஏரியின் உட்பகுதியில் உள்ள கல்வெட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குலத்தின் மையப் பகு தியில் இரண்டு மண் திட்டுகள் உள்ளன. அதில் பல் உயிர் மரங் கள் வளர்க்கப்படுகிறது. இங்கு ஏராளமான பறவைகள் தங்கி வாழ்ந்து வருகின்றன எங்கும் சீமை கருவேல மரங்கள் வளர்வ தால் பல்லுயிர் மரங்கள் வளர்ச்சி தடைபடுவதோடு, இதில் வரும் முட்கள் பறவைகளை காயப்படுத்தி இடையூறாக உள் ளது. ஆகவே இங்குள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொன்னுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்காச்சோளம் விலையை சிண்டிகேட் அமைத்து செயற்கையாக குறைப்பதாக விவசாயிகள் புகார்
உடுமலை, ஜன.25 - அறுவடை காலத்தில் வியாபாரி களும், கால்நடை தீவன நிறுவனங்க ளும் சிண்டிகேட் அமைத்து மக்கா சோளத்தை செயற்கையாக விலை குறைப்பு செய்வதால் விவசாயிக ளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என புகார் எழுந்துள்ளது. உடுமலை, மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. மக்காசோளம் பயிர் செய்யும்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயி ரம் வரை விலை இருந்தது. ஆனால் தற்போது அறுவடை காலத்தில் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,200 முதல் ரூ.2.400 வரை மட்டுமே வியா பாரிகள் விலை நிர்ணயம் செய்துள் ளனர். ஒரு ஏக்கர் மக்காச்சோளம் பயிர் செய்ய விதை, உரம், பூச்சி மருந்து, அறுவடை என ரூ.20 ஆயி ரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்யப்படுகிறது. அதீத மழை மற்றும் காட்டு பன்றிகளால் சேதம் ஏற்பட்டதால் விளைச்சலும் குறைந் துள்ளது. இதனால் மக்காச்சோள தட் டுகளையும் விற்பனை செய்ய இய லாத நிலை உள்ளது. குறைவான விளைச்சல் உள்ள நிலையில் விலை குறைப்பு செய்வதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதிகளில் விவசாயிகள் ஆண்டு முழுவதும் மக்காசோளம் உற்பத்தி செய்வதால், கால்நடை கள் மற்றும் கோழித் தீவன நிறுவனங் கள் அதிக அளவில் உள்ளன. இந்த நிறுவனங்களுடன் வியாபாரிகளும் கூட்டு சேர்ந்து செயற்கையாக விலை குறைப்பு செய்கின்றனர். எனவே விவசாயிகளுக்கு போது மான விலை கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசா யிகளின் எதிர்பார்க்கின்றனர்.
ஒன்றிய அரசு பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி வரி பிரச்சனையை களைய சைமா எதிர்பார்ப்பு
திருப்பூர், ஜன. 25 - ஒன்றிய அரசு சார்பில் நிதிய மைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், ஜி. எஸ்.டி. வரிவிதிப்பில் சீரான நடைமு றையை அமலாக்க வேண்டும், இதில் உள்ள பிரச்சனைகளைக் களைய வேண்டும் என்று தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் கோரியுள்ளது. இது தொடர்பாக சைமா தலை வர் ஏ.சி.ஈஸ்வரன் சனியன்று ஒன்றிய நிதியமைச்சருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: திருப்பூர் பனியன் உற்பத்தி மற்றும் வர்த்தகத் துறையினர் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தொழில் பிரச்சனைகளை சந்தித்து வருகின்ற னர். பின்னலாடை, விசைத்தறி உள் ளிட்ட ஜவுளித் தொழில் துறையின ருக்கு மிகவும் முக்கியமான நூல் விலையில் ஏற்ற, இறக்கங்கள் அடிக் கடி ஏற்படுகின்றன. பருத்தி நூல் விலை சீராக இருக்கும்படி அமைய மத்திய அரசு ஒத்துழைத்து உதவ வேண்டும். தற்போது வங்கதேச ஆடைகள் அதிகளவில் இறக்குமதியாகி, உள் நாட்டு பனியன் ஆடைகளின் உற் பத்தி மற்றும் விற்பனை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. வங்க தேசத்தில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் ஆயத்த ஆடை மற்றும் துணிகளுக்கு ‘கவுண்ட்டர்வீ லிங் அல்லது ஆண்ட்டி டம்பிங் டூட்டி’ போன்ற வரிகள் அறிவிக்கப்பட் டால், இந்திய ஜவுளி மற்றும் கார் மெண்ட்ஸ் தொழில் துறை காப்பாற் றப்படும். ஜி.எஸ்.டி., வரிவிதிப்பில் சரக்கு வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி.,வரிப் பிடித்தம் முறைப்படுத்த வேண்டும். வாகனங்கள் சார்பில் செலுத்தப்ப டாத ஜி.எஸ்.டி., வரியினங்களுக்காக தொழில் நிறுவனங்கள் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த சிக்கல்களை களைந்து, சீரான வரிப் பிடித்தம் நடைமுறைப்படுத்த வேண் டும். இதன்மூலம் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையினரும் அபராத வரி விதிப்பு பிரச்சனையில் இருந்து விடுபடுவர். எனவே மத்திய அரசு அறிவிக்க உள்ள பட்ஜெட்டில், இந்திய ஜவுளித் தொழில் மற்றும் கார்மெண்ட்ஸ் துறையை பலப்படுத்தும் வகை யில் இக்கோரிக்கைகளை பரிசீ லனை செய்ய வேண்டும் என்று தென் னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் வைகிங் ஏ.சி. ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
விடுபட்ட குளம் குட்டைகளை இணைக்க முதல்வரை சந்தித்து முறையிட முடிவு
அவிநாசி, ஜன. 25 - அவிநாசியில் நடைபெற்ற அவிநாசி அத் திக்கடவு போராட்டக் குழுவினர் கூட்டத்தில் விடுபட்டுள்ள குளம், குட்டைகளை இணைப்பது தொடர்பாக தமிழ்நாடு முதல் அமைச்சரை சந்திப்பது என முடிவு செய்யப் பட்டுள்ளது. அவிநாசி அத்திக்கடவு திட்டம் சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு அரசால் துவக்கி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மூன்று மாவட்டத்தில் உள்ள குளம் குட்டைக ளில் அத்திக்கடவு தண்ணீர் வந்து கொண்டுள் ளது. இந்நிலையில் அவிநாசி அத்திக்கடவு போராட்டக் குழுவினர், விடுபட்டுள்ள குளம் குட்டைகளை, உடனடியாக இணைக்க கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் சனியன்று அவிநாசி யில் நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து விடுபட்ட குளம் குட்டைகளை இணைக்க வேண்டும். மேலும் 1045 குளம், குட்டைகளில் தண்ணீர் சரியாக வராமல் உள்ளது. இதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிப் பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் தபால் நிலையத்தில் பாஸ்போட் சேவை மையம் திறப்பு
திருப்பூர், ஜன. 25 - திருப்பூர் மாநகராட்சி, இரயில் நிலையம் எதிரில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் புதிய பாஸ் போட் சேவை மையத்தை மாநிலத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர் வெள்ளியன்று திறந்து வைத்தனர். கோயம் புத்தூர் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ், 1 பாஸ் போட் சேவா மையம் மற்றும் 4 தபால் நிலைய பாஸ்போட் சேவா மையம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது, திருப்பூ ரில் திறக்கப்பட்டது 5ஆவது கிளை அலுவலகம் ஆகும்.
சீமானுக்கு வலுக்கும் கண்டனம்
சீமானுக்கு வலுக்கும் கண்டனம் திருப்பூர், ஜன. 25- பொதுவெளியில் அநாகரிகமாக பேசிய நாம் தமிழர் கட்சி யின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் மற்றும் ஈரோடு பத்திரிகையாளர் சங் கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை யில், அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசியல் கட்சியின் செய்தி களை மக்களுக்கு கொண்டு செல்வதிலும் , மக்களின் குறை கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வ தில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெண் பத்திரிக் கையாளர் எழுப்பிய கேள்விக்கு, கண்ணியக்குறைவான வார்த்தைகளை பேசியுள்ளார். ஊடங்கள் வாயிலாக தங்க ளது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் ஒளிபரப்ப இயலாத வகையில் தரக்குறைவான வார்த்தைகளை சீமான் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. சீமான் ஊடக வெளிச்சத்தின் மூலமே மக்களுக்குத் தெரிகிறார். சீமான் பேசும் வார்த்தைகளில் கண் ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கிராவல் மண் திருட்டு ஜேசிபி, டிப்பர் லாரி பறிமுதல்
மேட்டுப்பாளையம், ஜன.25- மேட்டுப்பாளையம் அருகே அனுமதியின்றி கோவில் நிலத்தில் கிராவல் மண் திருடிய இரு ஜேசிபிக்கள் மற்றும் ஒரு டிப்பர் லாரி பறிமுதல் செய்த நிலையில், ஓட்டுநர் தப்பி ஓடி னர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள குருந்தமலையில் குழந்தை வேலாயுத சாமி கோயில் உள் ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி கிரா வல் மண் திருடப்படுவதாக போலீசாருக்கு கோயிலின் செயல் அலுவலர் வனிதா புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு சட்டவிரோதமாக அனுமதி யின்றி கிராவல் மண் திருடப்படுவதை கண்டறிந்தனர். போலீசார் வருவதை கண்டதும் வாகனங்களின் ஓட்டு நர்கள் ராமகிருஷ்ணன், மதன், முத்துக்குமார் தப்பி ஓடியுள்ள னர். இதனையடுத்து அங்கு இருந்த இரு ஜேசிபிக்கள் மற்றும் ஒரு டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அனுமதியின்றி கிராவல் மண் திருடிய வாகனங்களின் ஓட்டு நர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
தொழிலாளி கொலை: 6 பேருக்கு இரட்டை ஆயுள்!
தொழிலாளி கொலை: 6 பேருக்கு இரட்டை ஆயுள்! சேலம், ஜன.25- மேட்டூரில் தொழிலாளியை வெட்டிக் கொன்ற 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், மேட்டூர், வஉசி நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில், மேட் டூர், விபிகே நகரைச் சேர்ந்த இளங்கோவுக்கு ஆதரவாக பேசி யுள்ளார். இதனால் கடந்த 2015 ஆண்டு ஒரு கும்பல் டாஸ் மாக் கடை முன்பு நின்று கொண்டிருந்த ரஞ்சித்குமாரை வெட் டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. இதுதொடர்பாக வழக்கு விசாரணை மேட்டூரிலுள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விசாரணை வெள்ளியன்று நிறைவுற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ரஞ்சித்குமாரை வெட்டிக் கொலை செய்த மேட்டூர் பிள்ளை யார் கோவில் தெருவைச் சேர்ந்த ராமமூா்த்தி, முனியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார், சேலம் கேம்ப் மேஸ்திரி குடியிருப்பைச் சேர்ந்த பாலாஜி, காவேரி பாலத்தைச் சேர்ந்த ஸ்டீல் சிவா, முருகன், எம்டிசி தியேட்டர் பகுதியைச் சோ்ந்த கணேஷ் ஆகிய ஆறு பேருக்கும் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.