தருமபுரி, ஆக.16- சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழனன்று பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியம், நார்த்தம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வியாழனன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் என்.எஸ்.கலைசெல்வன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நூர்ஜஹான் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், நார்த்தம்பட்டி கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற் றும் பொது நிதி செலவினங்கள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி வரி செலுத்தும் சேவை, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி, சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் உள் ளிட்ட பொருட்கள் குறித்து விவா திக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. ஈரோடு சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டங்கள் ஈரோடு மாவட்டத் தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்றது. பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், திருவாச்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தை யொட்டி நடைபெற்ற கிராம சபை கூட் டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சிறப்பு பார்வை யாளராக கலந்து கொண்டார். ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட கூரபாளையம் கிராம சபை கூட்டத்தில் சிபிஎம் சார்பில், அந்த ஊராட்சியினை மாநகராட்சியில் இணைக்கும் முடிவை எதிர்த்து மனு கொடுக்கப்பட்டது. அதுகுறித்து பொருள் வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல மேட்டுநாசுவம்பாளையம், எலவ மலை, பேரோடு ஆகிய ஊராட்சிகளி லும் நேரில் மனுக்கள் கொடுக்கப்பட் டது. இதேபோன்று கதிரம்பட்டி மற்றும் பிச்சாண்டபாளையம் ஊராட்சிகளிலும் மனுக்களை மார்க்சிஸ்ட் கட்சியினர் அளித்தனர்.