லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது
உதகை, ஜூலை 12- நில மறுவரையரை செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடலூர் வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள தோட்ட மூலா பகுதியைச் சேர்ந்தவர் உம்மு சல்மா. இவரது தாயார் இறந்துவிட கடந்த வருடத்தில் அவரது தந்தை மற்றும் சகோதரரும் இறந்து விட்டனர். இதையடுத்து உம்மு சல்மா தோட்டமுலாவில் உள்ள குடும்ப சொத்தில் தனது பாகம் 36 சென்ட் மற்றும் அவரது பெரியப்பா வழங்கிய 6 சென்ட் உள்ளிட்ட 42 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்காக உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார். அம்ம னுவை ஆய்வு செய்து, உம்மு சல்மா பெயருக்கு மாற் றம் செய்து வழங்க வேண்டும் என கூடலூர் வட்டாட்சிய ருக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக உம்மு சல்மா கூடலூர் வட்டாட்சியர் ராஜேஸ் வரியை நேரில் சந்தித்து, நிலத்தை மறுவரையறை செய்து வழங்க வேண்டும் என விண்ணப்பத்திருந்தார். அதற்காக வட்டாட்சியர் ராஜேஸ்வரி, ரூ.2 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று உம்மு சல்மா கூற, கடைசியாக இழுத்தடித்து பல மாதங்கள் கழித்து, ரூ.50 ஆயிரம் கொடுத்தால் மறுவரையரை செய்வதாக கூறியுள்ளார். பணம் கொடுக்க மனமில்லாத உம்மு சல்மா, இதுகுறித்து உதகையிலுள்ள லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகா ரளித்தார். இதனையடுத்து ஆய்வாளர் பரிமளா தலை மையில், லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் உம்மு சல்மா விடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பினர். தொடர்ந்து வியாழனன்று மாலை வட்டாட் சியர் அலுவலகத்தில் இருந்த ராஜேஸ்வரியிடம் உம்மு சல்மா பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கி ருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ராஜேஸ்வரியை கையும், களவுமாக கைது செய்தனர்.
குடிநீர் குழாய் வசதி கேட்ட இளைஞர் மீது தாக்குதல்
தருமபுரி, ஜூலை 12- குடிநீர் குழாய் அமைத்துத்தர வேண்டும் என கேட்ட இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக, பச்சினம்பட்டி கிராம வார்டு உறுப்பினர் மீது தருமபுரி நகர காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட இளைஞர் புகாரளித்துள் ளார். தருமபுரி ஒன்றியம், கடத்தூர் ஊராட்சிக்குபட்டது பச் சினம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங் கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, அதே கிரா மத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர், தனது வீட்டின் வழியாக குடிநீர் குழாய் செல்கிறது. எனவே, எனது வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி வார்டு உறுப்பினர் சசிக்குமாரிடம் கேட் டுள்ளார். அதற்கு சரியென பதிலளித்த சசிக்குமார், பின்னர் கண்ணன் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்க வில்லை. இதுகுறித்து கண்ணன், கடந்த புதனன்று வார்டு உறுப்பினர் சசிக்குமாரிடம், எங்கள் வீட்டிற்கு ஏன் குடி நீர் இணைப்பு வழங்கவில்லை என கேட்டுள்ளார். இத னால் ஆத்திரமடைந்த வார்டு உறுப்பினர் சசிக்குமார், அவரது உறவினர்கள் மகேந்திரன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கண்ணனை கடுமையாக அடித்துள்ள னர். இதில் படுகாயமடைந்த கண்ணன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டார். குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டும் வார்டு உறுப்பினர் சசிகுமாரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும். மேலும், தாக்குதல் நடத்திய சசிகுமார் உள்ளிட்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என தாக்குதலுக்கு உள்ளானவர் புகார் அளித்துள்ளார்.
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு தருமபுரியில் 8,314 பேர் எழுதுகின்றனர்
தருமபுரி, ஜூலை 12- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் - 1 தேர்வினை, தருமபுரி மாவட்டத்தில் 8,314 பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் - 1 தேர்வு சனியன்று (இன்று) நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 25 தேர்வு மையங்க ளில் நடைபெறும் இத்தேர்வினை, சுமார் 8,314 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் தேர்வுக் கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப் பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்து கள் நின்று செல்லும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதென மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
ஏடிஎம் மையத்தில் பேட்டரி திருட்டு
கோவை, ஜூலை 12- கோவில்பாளையம் அருகே வங்கியின் ஏடிஎம் எந்தி ரத்திற்கு பயன்படுத்தப்படும் 4 யுபிஎஸ் பேட்டரிகள் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவை அடுத்த கோவில்பாளையம் பழைய தபால் அலுவலகம் அருகில் வங்கி ஏடிஎம் உள்ளது. வெள்ளியன்று அதே பகுதியை சேர்ந்த கோபால் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது உள்ளே நின்றிருந்த வாலிபரின் நடவடிக்கை சந்தேகப்படும்படி இருந்தது. ஏடிஎம் எந்திரம் செயல்படாத நிலையில், அந்த வாலிபரின் கையில் ஏ.டி.எம் எந்திரத்திற்கு பயன்படுத்தப்படும் 4 யுபிஎஸ் பேட்டரி கள் இருந்தது. உடனே கோபால் அக்கம்பக்கத்தினர் உதவியு டன் அந்த நபரை மடக்கி பிடித்தார். அவரை கோவில்பாளை யம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பேட்டரி திருட முயன்றது நாராயணசாமி லே-அவுட்டை சேர்ந்த செந் தில்குமார்(45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீ சார் அவரை கைது செய்தனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை மாவட்ட கல்வி அலுவலருக்கு நோட்டீஸ்
கோவை, ஜூலை 12- மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த விவகா ரத்தில், புகாரை முறைப்படி விசாரித்து அறிக்கை தராமல் அலட்சியப்படுத்திய, தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலருக்கு நோட்டீஸ் வழங்க வெள்ளியன்று ஆட்சியர் உத்தரவிட்டார். கோவை வடவள்ளியில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி (டெல்லி பப்ளிக் ஸ்கூல்) மாணவிக்கு பாலியல் தொல்லை யளித்த நூலக மேற்பார்வையாளர் பால்ராஜை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தகவலை சொல்லாமல் மறைத்த பள்ளி தலைமை ஆசிரியை மகேஷ்வரி, பள்ளி நிர்வாகி தண்டபாணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப் பட்டது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், தனியார் பள்ளிக ளுக்கான மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்தார். பள்ளியில் நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட கல்வி அலுவலர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு எந்த அறிக்கை கொடுக்காமலும், தகவலை தெரிவிக்காமல் இருந் துள்ளனர். இதனையடுத்தே, மாவட்ட குழந்தைகள் நல அலுவ லகத்தின் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து நூலக பொறுப்பு ஆசிரி யர் பால்ராஜை கைது செய்தனர். அதேபோல், இவ்விவ காரம் தொடர்பாக போலீஸாருக்கு முறையாக தகவல் அளிக்காத பள்ளி முதல்வர் மகேஸ்வரி, நிர்வாகி தண்ட பாணி ஆகியோர் மீதும் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவரிடம் புகார் தெரிவித்தும், அலட்சியப்படுத்தி, தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு விசுவாசமாய் இருந்த மாவட்ட கல்வி அலுவலருக்கு விளக்கமளிக்க நோட்டீஸ் வழங்க ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
சாலை விதிகளை மீறிய 40 வாகனங்கள் பறிமுதல்!
நாமக்கல், ஜூலை 12- திருச்செங்கோடு பகுதியில் கடந்த மே, ஜூன் மாதங் களில் நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையில், சாலை விதிகளை மீறிய 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.15.30 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சுற்றுவட் டாரப் பகுதியில் கடந்த மே, ஜூன் மாதங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தொடர் வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டனர். இரு மாதங்களில் 700 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில், 167 வாகனங்களுக்குத் தணிக்கை அறிக் கைகள் வழங்கப்பட்டன. அப்போது, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட இதர விதிமீறல்களில் 52 வாகன உரிமையாளர்களிடம் ரூ.3,20,900 வரியும், இணக்கக் கட்டணமாக ரூ.1,76,000 பணமும் வசூலிக்கப்பட்டன. 115 வாகனங்களுக்கு ரூ.10,33,000 வரி, இணக்கக் கட்டணம் செலுத்த உத்தரவிடப்பட்டது. மொத்தத்தில் கடந்த இரு மாதங்களில் வரி, இணக்கக் கட்டணமாக ரூ.15,30,500 வரு வாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தகுதிச்சான்றிதழ், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவை நடப்பில் வைத்திருக்காமலும், சாலை வரி செலுத்தாமலும் வாக னங்களை இயக்கியதாக 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பட்டா மாறுதல் செய்து மோசடி அரசு ஊழியர்கள் கைது
கோவை, ஜூலை 12- பட்டா மாறுதல் செய்து மோசடியில் ஈடுபட்ட இரண்டு அரசு ஊழியர்கள் வெள்ளியன்று கைது செய்யப்பட்டனர். கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் நில அளவை யாளராக வேலை செய்து வந்தவர் அருண் பிரதாப். இவரது கூட்டாளி மணிகண்டன். இவர் ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த இரண்டு பேரும் தெற்கு தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வரைவாளரின் நில அளவை மற்றும் பதிவேடுகள் ரகசிய குறியீடு எண்ணை பயன்படுத்தி அந்த அதிகாரி பட்டா மாறு தலுக்கு ஒப்புதல் அளித்தது போல் மோசடி செய்தனர். இது குறித்து கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப் பட்டிருந்தது. இதனையடுத்து, அருண் பிரதாப், மணிகண் டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களின் ஆன்லைன் தகவலை பெற்று குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்த இரண்டு பேரும் ஏரா ளமான அளவில் பட்டா மாறுதல் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் கைதான இரண்டு பேரும் தங்களை ஜாமி னில் விடுதலை செய்யக் கோரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4 இல் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்பொழுது இரண்டு பேரையும் ஜாமினில் விடுதலை செய்யக் கூடாது என்று காவல்துறை தரப் பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை வருகிற 15ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத் தார்.
விபத்தில் சிக்கிய பெண்ணிடம் நகை திருட்டு
கோவை, ஜூலை 12- விபத்தில் சிக்கிய பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையை திருட்டிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சீரநாயக்கன் பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பிரதீபா (34). இவர் கோவை தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு வாகனத்தில் செல்வார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு ஆட்டோ மூலம் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்நிலையில் அவர் அணிந்து இருந்த 7 பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரதீபா சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 விரைவு ரயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு
சேலம், ஜூலை 12- சேலம் வழியாக செல்லும் மைசூரு - தூத்துக்குடி உட்பட 3 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயணிகளின் கூட்ட நெரிச லைத் தவிர்க்கும் வகையில், சேலம் ரயில்வே கோட்டம் வழி யாக இயக்கப்படும் மைசூரு - தூத்துக்குடி விரைவு ரயில் உட் பட 3 விரைவு ரயில்களில் கூடுதலான முன்பதிவில்லா பெட்டி களை இணைக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள் ளது. அதன்படி, மைசூரு - தூத்துக்குடி விரைவு ரயிலில் வரும் ஜூலை 23 ஆம் தேதியிலிருந்து கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. மறுமார்க்கத்தில் தூத்துக்குடி -மைசூரு விரைவு ரயிலில் ஜூலை 24 ஆம் தேதி முதல் கூடுதலாக 2 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்ப டுகின்றன. அதேபோல மைசூரு - மயிலாடுதுறை விரைவு ரயிலில் ஜூலை 25 ஆம் தேதியிலிருந்தும், மயிலாடுதுறை - மைசூரு விரைவு ரயிலில் ஜூலை 26 ஆம் தேதியிலி ருந்தும் கூடுதலாக 2 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்ப டுகின்றன. பெங்களூரு - கன்னியாகுமரி விரைவு ரயிலில் வரும் ஜூலை 24 ஆம் தேதியிலிருந்தும், கன்னியாகுமரி - பெங்க ளூரு விரைவு ரயிலில் ஜூலை 27 ஆம் தேதியிலிருந்தும் கூடுத லாக ஒரு முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுகிறது. இதன் மூலம் 3 விரைவு ரயில்களிலும் 4 முன்பதிவில்லா பொதுப்பெட் டியும், மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு பெட்டியும் இணைக் கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ஈரோடு, ஜூலை 12- ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை பயின்று தேர்வு பெற்ற மருத்துவ மாணவ, மாணவியருக் கான பட்டமளிப்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது. அரசு மருத்தவக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சி யர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறு கையில், வீட்டுவசதி வாரியத்தின் சார்பாக புதிய குடியிருப்பு கள் கட்ட ஏற்பாடு செய்யப்படும். பெருந்துறையில் நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிய சுத்திகரிப்பு நிலையம் 6 மாத காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். ஈரோட்டில் ஒரு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். பெருந்துறை மருத்து வமனையில் அதற்கான சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்ப டும். பேருந்து நிலையப் பணிகள் 3 மாதங்களில் முடிவடைய உள்ளது. பணிகள் முடிந்தவுடன் திறக்கப்படும், என்றார். முன்னதாக, கடந்த 2018-19 சேர்ந்து பயின்று கல்வியை முடித்த 96 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை அமைச் சர் சு.முத்துசாமி வழங்கினார்.