districts

img

பட்டதாரி பெண்ணுக்கும் திருநம்பிக்கும் திருமணம்

ஈரோடு, பிப்.15- பட்டதாரி பெண்ணும், திருநம்பியும் ஈரோடு அருகில் காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்ட சம்பவம்  கவனத்தை ஈர்த்துள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம்,  திருமுக்கூடலை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகள் பி.காம் பட்டதாரி அருணா தேவி. இவர்களின் உறவினர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளனர். அங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் சென்ற போது, அழகாபுரி காந்திநகரை சேர்ந்த அருண் பாஷ் என்ற  திருநம்பியுடன் காதல் கொண்டுள்ளார். அருண்பாஷ் எம்பிஏ  படித்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய  வந்ததும், பெற்றோர் ஏற்க மறுத்தனர். இதனால், இரு மாதங் களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறி கேரளா சென்றுள் ளனர். அங்கு கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள  திருநங்கை ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் நாமக்கல்  மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தம்மம் பவுண்டேசன்  நடத்தி வரும் திருநங்கை பிரியாவிடம் இவர்களை அனுப்பி  வைத்தார்.  இதையடுத்து இருவரும் கோபியில் உள்ள மனிதம்  சட்ட உதவி மையத்திற்கு அழைத்து வந்தார். அதைத் தொடர்ந்து காதலர் தினத்தன்று இருவரும், தந்தை பெரியார்  உருவ படம் முன் மாலை மாற்றி சுயமரியாதை திருமணம்  செய்து கொண்டனர். திராவிடர் கழகத்தினர் திருமணத்திற் கான ஏற்பாடு செய்திருந்தனர்.