districts

img

காலிங்கராயன் சிலைக்கு அரசு மரியாதை

ஈரோடு, ஜன. 19- காலிங்கராயன் திருவுருவச்சி லைக்கு அமைச்சர் சு.முத்துசாமி மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார்.  காலிங்கராயன் தினத்தையொட்டி, ஈரோடு, பவானி அருகே காலிங்கராயன் பாளையத்தில் அமைந்துள்ள மணி மண்டபத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, சட்டமன்ற உறுப்பி னர்கள் ஏ.ஜி.வெங்கடாச்சலம், ஈஸ்வ ரன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி, திரு வுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அப்போது அவர் பேசுகையில்,  பவானி ஆற்றின் குறுக்கே தடுப் பணை கட்டி 1282 ஆம் ஆண்டு காலிங்கராயன் வாய்க்கால் முழு வதும் பணி முடிக் கப்பட்டு, இதேநா ளில் பாசனத் திற்கு தண்ணீர் திறந்து விடப்பட் டது. ஏறத்தாழ  12 ஆண்டு காலம் இப்பணி நடைபெற்று முடிக்கப்பட்டது. இதனு டைய திட்டப் பணிக்கு காரணமாக இருந்தவர் காலிங்கராயன் என்பவர்.  அன்றைக்கே எந்தவிதமான விஞ்ஞான  முன்னேற்றம் இல்லாத நிலையில்,  தன்னுடைய சொந்த முயற்சியில், சொந்த நிதியில் இருந்து சுமார் ஏறத்தாழ  57 கிமீ நீளத்திற்கு வாய்க்காலை வெட்டி னார். இன்றைக்கு முப்போகமும் தண் ணீர் பாயக் கூடிய வகையில், பவானி,  நொய்யல், அமராவதி ஆகிய ஆறு களை வெட்டிய கால்வாயின் மூலம் இணைத்தார். இது ஒரு சிறப்புக்குரிய திட்டமாகும்.  ஏறத்தாழ சுமார் 700 ஆண்டுக்கு முன்பாக தொலைநோக்குப் பார்வை யுடன் வீணாகும் தண்ணீரைக் கொண்டு வந்து விவசாயத்திற்கு பயன்படுத்தினார். ஒரு தொலைநோக்கு  பார்வையோடு இந்தத் திட்டத்தை உரு வாக்கி தந்த அவரை நாம் இந்த நேரத் திலே வணங்க வேண்டியது நமது கடமையாகும் என்றார்.