districts

img

மணிப்பூர் கலவரத்தை எதிர்த்து அரசு ஊழியர் சங்கம் போராட்டம்

திருப்பூர், ஜூலை 27 - மணிப்பூரில் நடைபெற்று வரும் மனிதநேயமற்ற, காட்டு மிராண்டித்தனமான செயல்களை கண்டித்து தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் வடக்கு வட்ட கிளை கதர்  கிராம தொழில் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக்கலை நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  அதேபோல் செவ்வாயன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் திருப்பூர் வடக்கு வட்டக்கிளைச் செயலாளர் விசுவநா தன், துணைத் தலைவர் அம்மாசை, மாவட்ட இணை செயலா ளர் ராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் அரசு  ஊழியர்கள் பங்கேற்றனர். திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம், சார்நிலை கருவூலத்துறை,  வடக்கு மற்றும் தெற்கு நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பும் கண்டன  ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.