ஈரோடு, அக். 8- எல்பிஎப் தேர்தல் காரணமாக பேருந்து கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவ தியடைந்தனர். அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலத்தில் அந்தியூர், ஈ1, ஈ2, ஈ3, கவுந்தப் பாடி, கோபி, சத்தி, நம்பியூர், தாளவாடி, பவானி, பெருந்துறை, கொடுமுடி, கரூர் மற் றும் பழுது நீக்கம் பிரிவு ஆகிய 14 பணி மனைகள் உள்ளன. இவற்றில் இருந்து சுமார் ஆயிரம் பேருந்துகள் நாள் தோறும் இயக்கப் படுகின்றன. இதில், மகளிர் பயணம் செய்யும் கட்டணமில்லா பேருந்துகளும் அடங்கும். இந்நிலையில், செவ்வாயன்று வழக்கம் போல் இயங்கிய பேருந்துகள் பலவும் இயக் கப்படவில்லை. இதுகுறித்து விசாரித்த போது திமுகவின் தொழிற்சங்க பிரிவான தொமுச நிர்வாகிகள் தேர்தல் நடப்பதாக வும், அதற்காக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வண்டியை நிறுத்தி விட்டு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. தொழிற்சங்க ஜனநாயக விதிகளின்படி திமுக தலைமையிலான தொமுச நிர்வாகி கள் தேர்தல், அரசு போக்குவரத்து ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட அனைத்து கிளைகளி லும் நடக்கிறது. இந்த சங்க நிர்வாகிகள் தேர்த லில் வாக்களிக்கும் வகையில் தொமுச தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கி தேர்தலை நடத்த உதவி செய்கிறது. அதே நேரத்தில், பயணிகள் அவதிப்படக்கூடாது என்பது குறித்து சிறிதும் கவலைப்படா மல், மாற்று ஏற்பாடுகளைக்கூட செய்யாமல், பேருந்துகளை நிறுத்திவிட்டு சென்றதால், பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதேநேரத்தில், தொழிற்சங்கங்கள் மீதும், தொழிலாளர்களின் உரிமைகளுக்கு அரணாய் நிற்பதாய் சொல்லும், திமுகவும், தமிழக தொழிலாளர் நலத்துறையும், சாம்சங் தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதை கண்டு தமிழக மக்களே எள்ளி நகை யாடுகிறார்கள். ஒரு கண்ணில் வெண்ணை யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல என்பதை காலம் உணர்த்தும் என்பதே அரசியல் நோக் கர்களின் கருத்தாக உள்ளது.