திருப்பூர், ஜன. 11 - ஆளுநர் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி திருப்பூரில் வியாழக்கிழமை போராட்டம் நடத்த மத சார்பற்ற முற்போக்கு கட்சிகள் முடிவு செய்துள்ளன. மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநா யக கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத் தில் மதிமுக மாநகர் மாவட்ட செயலா ளர் நாகராஜ் தலைமையில் புதன்கி ழமை நடைபெற்றது. இந்திய அரசியல் சாசனத்திற்கு எதி ராக, அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காமல், தமிழ்நாடு அரசு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மா னங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆர் எஸ்எஸ் மதவெறி நிகழ்ச்சி நிரலை முன்வைத்து தமிழ்நாடு ஆளுநர் ரவி வரம்பு மீறி செயல்பட்டு வருகிறார். இவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலி யுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கட்சி களின் சார்பில் வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இக்கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.மூர்த்தி, கே.ரங்க ராஜ், டி.ஜெயபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் எம்.சி. செல்வராஜ் எம்.சி., விடுதலை சிறுத்தைகள் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா உள்பட காங்கிரஸ், கொ.ம.தே.க., ம.ம.க உள் ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.