நாமக்கல், நவ.23- நாமக்கல் அருகே செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளிக்கு, தேவையான ஆசிரியர்கள் நிய மிக்க வேண்டும் என வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் தர்ணாவில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், பொம்ம சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பெருமாப்பட்டியில் ஊராட்சி ஒன் றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அக்கிரா மத்தைச் சேர்ந்த 52 மாணவ, மாணவி கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மேலும், இப் பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே கடந்த 18 மாதங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். அவரே 1 முதல் 5 வகுப்புகளுக்கும் பாடம் நடத்தி வருகிறார். தற்போது அந்த ஆசிரியரும் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டதால், ஆசிரியர்க ளின்றி மாணவர்கள் தவிப்புக்குள் ளாகினர். இந்நிலையில், வெள்ளி யன்று பள்ளி முன்பு மாணவ, மாண விகள் தர்ணாவில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக பெற் றோர்களும் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், பெருமாப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில், கடந்த 2 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. 2 ஆசிரியர்கள் இருந்த நிலையில், தற்போது ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருந்து வருகிறார். நிரந் தரமாக உரிய ஆசிரியர்களை பணி யமர்த்த வேண்டும். மேலும், பள்ளி யின் கட்டிடம் இடிந்து விழும் நிலை யில் உள்ளது. எனவே, தலைமை ஆசிரியர் மற்றும் தேவையான ஆசிரியர்களை நியமித்து, பள் ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். பள்ளி சுகாதாரமாக இல் லாததால், மழைக்காலங்களில் பள் ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள ஏழை மக்கள் அரசுப்பள்ளியைப் மட்டுமே நம்பி குழந்தைகளை படிக்க வைக்கின்ற னர். தற்போது பள்ளியில் கட்டி டங்கள் சரியாக இல்லை; ஆசிரியர் கள் இல்லாததால் பல குழந்தை களை வேறு பள்ளிக்கு கொண்டு போய் சிலர் சேர்த்து வருவதாக, தெரிவித்தனர்.