districts

img

அரசு பள்ளி மாணவியின் ஜப்பான் பயணம்

ஈரோடு, ஜூன் 26- மைக்ரோ சாப்ட் தொழிற்நுட்பத்தில் உச் சம் பெற்று இருக்கிற ஜப்பான் நாட்டிற்கு, மஞ் சள் விளையும் ஈரோட்டு பூமியில் இருந்து கல்விச் சுற்றுலா சென்று வந்த அரசுப்பள்ளி மாணவி அனைவரின் கவனத்தையும் ஈர்த் துள்ளார். ஈரோடு மாவட்டம், பூனாட்சி பகுதியைச்  சேர்ந்த செல்வி.க.கோபிகா ஸ்ரீ, அம்மா பேட்டை ஒன்றியம், முகாசிபுதூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்ற வர். இவர் 2022-2023 நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 476 மதிப் பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல்  இடம் பெற்று தேர்ச்சி பெற்றார். இவரின்  தேர்ச்சிக்கு பரிசாக தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை ஜப்பான் நாட்டிற்கு அழைத்து சென்று  கௌரவித்துள்ளது. ஒரு நாட்டின் கல்வி, கலாச்சாரம், பண் பாடு ஆகியவற்றை மாணவ, மாணவியர் கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் மூலம், முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களை கல்விச் சுற் றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட் டது. அந்த வகையில், கஸ்தூரிபா காந்தி  வித்யாலயா பெண்கள் விடுதியில் தங்கிப்ப யின்ற மாணவியர்களில் முதல் மாணவியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவி கோபிகா ஸ்ரீ, ஜப்பான் நாட்டிற்கு செல்லும் வாய்ப்பினை பெற்றிருந்தார்.  தமிழ்நாட்டிலிருந்து பள்ளிக்கல்வித் துறையின் மூலம் ஜப்பான் நாட்டிற்கு செல்ல  ஈரோடு, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய  மாவட்டங்களில் இருந்து தேர்வான 3 மாணவி யர்களில் இவர் முதலிடத்தை பெற்றிருந் தார். ஜூன் 16 முதல் 22 ஆம் தேதி வரை ஜப் பான் நாட்டில் தங்கியிருந்து அந்நாட்டின் கல்வி மற்றும் இதர அறிவியல் தொழில் நுட்பங்களை கற்றறிந்தார். பயணத்தை முடித்துக் கொண்டு சென்னையில் 23.06.2024 அன்று அனைவருக்கும் கல்வி இயக்கக மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களை சந் தித்த பின் தனதுசொந்த ஊர் திரும்பி உள் ளார். தற்பொழுது மாணவி கோபிகா ஸ்ரீ,  அம்மாபேட்டை ஒன்றியம், வெள்ளித்திருப் பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம்  வகுப்பு உயிரியல்-கணிதப்பிரிவில் பயின்று  வருகின்றார். ஜப்பான் நாட்டிற்கு சென்று வந்த அனுப வத்தை மாணவி கோபிகா ஸ்ரீ தெரிவிக்கை யில், நான் மாணவ, மாணவியர்களோடு ஜப் பான் நாட்டிற்கு பயணம் செய்தபோது அந் நாட்டிலுள்ள நகோயா பல்கலைக்கழ கத்திற்கு அழைத்து சென்றார்கள். அப்போது  அங்கு பிளாஸ்மா எனும் பாடம் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக் கும் முறையினை பார்வையிட்டோம். அதில்  மாணவ, மாணவியர்களுக்கு நேரடியாக தாங்களே பதில் அறிந்து கொள்ளும் அள விற்கு பாடம் நடத்திய விதம் என்னை மிகவும்  கவர்ந்தது. ஜப்பான் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை தெரிந்து கொண் டேன். இந்த அரிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி என தெரி வித்தார்.