திருப்பூர், ஆக.10 - எடை குறைவாகப் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என பெற்றோர்கள் கைவிட்ட நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைத்துப் பராமரித்து அந்த குழந் தைகளை காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓலப் பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண் ணுக்கு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி யன்று ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டைக் குழந்தை கள் பிறந்துள்ளனர். பிறக்கும் போது ஆண் குழந்தை 900 கிராம், பெண் குழந்தை 700 கிராம் என மிகக் குறைவான எடையில் இருந் தனர். எனவே மிகக் குறைவான எடையில் பிறந்த இக்குழந்தைகள் உயிர் பிழைக்காது என்று பெற் றோர்கள் கருதி அப்போதே திருப் பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். மருத்துவக் கல் லூரி முதல்வர் முருகேசன் ஆலோ சனைப்படி இருப்பிட மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன், குழந்தைகள் நல நலப்பிரிவு துறை தலைவர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவர்கள் ராஜகோபால், தன சேகரன், பிரியா விஸ்வாசம், மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு செவிலியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுமார் 130 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இரு குழந் தைகளையும் வைத்து கண் காணித்து வந்தனர். 900 கிராமில் இருந்த ஆண் குழந்தை தற்போது 2 கிலோ 030 கிராமும், 700 கிராமில் இருந்த பெண் குழந்தை 1 கிலோ 830 கிராம் வரை அதிகரிக்க வைத்து உள்ளனர். இந்தக் குழந்தைகளை பரா மரிக்க முடியாத அவர்களின் பெற் றோரை வரவழைத்து, குழந்தை களின் எதிர்காலம் கருதி குழந்தை கள் நலக் குழுவில் முன்னிலைப் படுத்தி புதனன்று மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு அலுவலர் களிடம் ஒப்படைத்தனர். திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எடை குறை வாக பிறந்து உயிர் பிழைக்காது என்று கருதப்பட்ட இரட்டைக் குழந் தைகளை காப்பாற்றி பராமரித்து எடையை அதிகரிக்க செய்த மருத்துவர்களின் சேவைப் பணி மிகப் பெரிய சாதனையாக பாராட்டு பெற்றுள்ளது.