சேலம், செப்.19- மதிப்பூதியம் பெறும் ஊழியர்க ளுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட் டத்தை நடைமுறைப்படுத்த வேண் டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் விடுப்பு உள் ளிட்ட உரிமைகளை வழங்க வேண் டும். சத்துணவு மற்றும் அங்கன் வாடி, வருவாய் கிராம உதவி யாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், செவிலியர்கள் என தொகுப்பூதி யம், மதிப்பூதியம் பெறும் மூன்று லட்சம் ஊழியர்களுக்கு, வரைய றுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணி யாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப் படுத்த வேண்டும். அரசுத்துறைக ளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம், கோரிமேடு பகுதியிலுள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் முன்பு, சங்கத் தின் வட்டக்கிளைத் தலைவர் முரு கப்பெருமாள் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதே போன்று தொழிலாளர் நல அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் சுரேஷ், தொழிற் பயிற்சி அலுவலர் சங்க மாநிலப் பொருளாளர் திருநாவுக்கரசு, வட் டக்கிளைச் செயலாளர் ஸ்ரீபதி உட் பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு இதே கோரிக்கைகளை வலியு றுத்தி ஈரோடு வணிக வரித்துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ச.விஜயம னோகரன் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலா ளர் மு.சீனிவாசன் சிறப்புரையாற்றி னார். சரணவமணி, சந்திரமௌலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதேபோல ஐடிஐ, வேலை வாய்ப்பு அலுவலகம், மாவட்ட தொழில் மையம், கால்நடை பரா மரிப்பு, கூட்டுறவுத் துறை, வேளாண்மைத்துறை, மாநக ராட்சி, வனத்துறை மற்றும் முதன்மை கல்வி அலுவலகம் ஆகி யவற்றில் மதிய உணவு இடை வேளையின் போது தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றன. நம்பியூர் வட்டாட்சியர் அலு வலகம் மற்றும் பேரூராட்சி அலு வலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாமக்கல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் வியாழனன்று நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராசிபுரம் வட்டக்கிளை தலைவர் தாமோதரன் தலைமை தாங்கி னார். மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர் கோரிக்கைகளை விளக்கி சிறப்பு ரையாற்றினார். நூற்றுக்கும் மேற் பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். வட்ட கிளை பொரு ளாளர் வினோத்குமார் நன்றி உரை யாற்றினார். இதேபோன்று கோவை, தரும புரி ஆகிய மாவட்டங்களில் பல் வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழி யர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர் வாகிகள் பங்கேற்றனர்.