districts

img

காலமுறை ஊதியம் வழங்க அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, டிச.1- மதிப்பூதியம் பெறும் அரசு ஊழி யர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண் டும், என அரசு ஊழியர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் தருமபுரி மாவட்ட 15 ஆவது மாநாடு, தருமபுரி அம்பிகா வாணி யர் மஹாலில் ஞாயிறன்று நடை பெற்றது. மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன் தலைமை வகித்தார்.  துணைத்தலைவர் எஸ்.குணசேக ரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். மகளிர் துணைக்குழு அமைப் பாளர் பி.எஸ்.இளவேனில் வர வேற்றார். அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க மாவட்டச் செயலாளர்  எம்.பெருமாள் துவக்கவுரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் ஏ. தெய்வானை, பொருளாளர் எம். அன்பழகன் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் மு.சீனி வாசன் சிறப்புரையாற்றினார். சிஐ டியு மாநிலச் செயலாளர் சி.நாகரா சன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைச்செயலாளர் ஏ. மாதேஸ்வரன், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, பி எஸ்என்எல் ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் பி.கிருஷ்ணன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். தீர்மானம் இம்மாநாட்டில், புதிய பென்சன்  திட்டத்தை ரத்து செய்து, பழைய  பென்சன் திட்டத்தை அமல்படுத்த  வேண்டும். 21 மாத கால நிலுவைத்  தொகை, முடக்கப்பட்ட அக விலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர்  விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் அரசு ஊழியர்களுக்கு வரையறுக்கப் பட்ட காலமுறை ஊதியம் வழங்க  வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப் படையிலான பணியிடங்கள் 5 சதவி கிதமாக குறைக்கப்பட்டதை கைவிட்டு, ஏற்கனவே வழங்கப் பட்டு வந்த 25 சதவிகித நடை முறையை கொண்டு வர வேண் டும். கருணை அடிப்படையில் சத்துணவு ஊழியர்களின் ஆண் வாரிசுக்கு பணி வழங்க மறுப் பதை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்களின் பணிப்பளுவினை குறைக்க வேண்டும். அலுவலக  பணி நேரத்துக்கு பின்பும், அரசு  விடுமுறை நாட்களிலும் நடத்தப் பட்டு வரும் ஆய்வுக்கூட்டங்களை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின்  தருமபுரி மாவட்டத் தலைவராக  எம்.சுருளிநாதன், செயலாளராக  ஏ.தெய்வானை, பொருளாளராக எம்.அன்பழகன், துணைத்தலை வர்களாக எஸ்.குணசேகரன், பி.சங் கர், ஆர்.ஜெயவேல், கிருஷ்ண மூர்த்தி, இணைச்செயலாளர்க ளாக சி.அழகிரி, எம்.முருகன், கே. தேவகி, செ.ராமன், தணிக்கையா ளர்களாக ராஜாங்கம், யாரப்பாஷா  ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். மாநில துணைத்தலைவர் கோ. பழனியம்மாள் நிறைவுரையாற்றி னார். முடிவில், ஆர்.ஜெயவேல் நன்றி கூறினார்.