சேலம், நவ.29- சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய குண்டூசியை சேலம் அரசு மருத்துவர்கள் பாதுகாப்பாக அகற்றி சாதனை படைத்தனர். இதுகுறித்து சேலம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனை யின் முதல்வர் தேவி மீனாள் வெள் ளியன்று நிருபர்களிடம் கூறியதா வது, சேலம் மாவட்டம், தாரமங்க லம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ப வரின் மகன் செல்வம் (13). இவர் கடந்த நவ.26 ஆம் தேதி எதிர்பாராத விதமாக குண்டூசியை முழுங்கியுள் ளார். இதை பார்த்து அதிர்ச்சிய டைந்த குடும்பத்தினர், சிறுவனை மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதித்தனர். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, வலது நுரையீரல் மூச்சுக்குழாயில் குண் டூசி சிக்கியிருப்பது கண்டறியப் பட்டது. இதையடுத்து உடனடியாக அவசர அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. காது, மூக்கு, தொண்டை துறைத்தலை வர் பேராசிரியர் கிருஷ்ண சுந்தரி தலைமையில், மயக்கவியல், கதிரி யக்க இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கொண்ட குழுவின் உதவியுடன் அறுவை சிகிச்சை தொடங்கியது. தொடர்ந்து நவீன டெலிப்ரான்கோஸ் கோப் கருவி மூலம் மூன்று சென்டி மீட்டர் அளவுள்ள குண்டூசி பாது காப்பாக அகற்றப்பட்டது. இந்த மருத்துவ சிகிச்சையை வெற்றிகர மாக செய்த மருத்துவக்குழுவின ருக்கு எனது பாராட்டுகளை தெரி வித்துக் கொள்கிறேன். சேலம் அரசு மருத்துவமனை யில் அருகில் உள்ள மாவட்டங்க ளில் இருந்து சிகிச்சைக்காக அதிக ளவில் வருகின்றனர். அதிலும் குறிப் பாக நிலக்கடலை, விதைகள், பிளாஸ்டிக் விசில், கூரான ஊசிகள் மற்றும் ஊக்குகள் போன்றவை தொண்டை பகுதியில் மாட்டிக் கொண்டதாக ஆறு வயதுக்குட் பட்ட குழந்தைகள் வருகின்றனர். மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்ளும் போது சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை யும் ஏற்படுகிறது. குழந்தைகள் இது போன்ற பொருளை சாப்பிட்டுவிட் டால் பயமோ, பதட்டமோ கொள்ளா மல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்கு வர வேண்டும், என்றார்.