ஈரோடு, பிப். 10- ஈரோடு சிக்கய்ய நாய்க் கர் கல்லூரியை அரசு கல்லூ ரியாக மாற்ற ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததைய டுத்து, இந்திய மாணவர் சங் கத்தினர் திங்களன்று கேக் வெட்டி கொண்டாடினர். ஈரோடு சிக்கய்ய நாயக் கர் கல்லூரியை அரசு கல்லூ ரியாக மாற்ற வேண்டும் என 13 ஆண்டுகளாக இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை வைத்து வந்தது. மேலும், பல்வேறு போராட்டங்களும் முன் னெடுக்கப்பட்டன. இதையடுத்து மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதல் பெற்று மத்திய அரசிற்கு அனுப்பியது. கடந்த 2 ஆண்டுகளாக குடியரசுத் தலைவரின் ஒப்பு தல் பெறாமல் இருந்த நிலையில், கடந்த பிப்.4 ஆம் தேதி குடியரசுத் தலைவர் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். மாணவர் சங்கத் தின் 13 ஆண்டுகால போராட்டம், மாநில அர சின் முன் முயற்சியால் ஈரோடு சிக்கய்ய நாயக் கர் கல்லூரி அரசு கல்லூரியாக மாற உள் ளது. இதை கொண்டாடும் வகையில், இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி முன்பு திங்க ளன்று கேக் வெட்டி கொண்டாடினர். இந்நி கழ்ச்சிக்கு மாணவர் சங்க மாவட்டத் தலை வர் த.நவீன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் கௌதம், மாவட்ட நிர்வாகி விஸ்வநாதன், முன்னாள் மாவட்டத் தலைவர் வினிஷா, மாவட்டத் துணைச் செய லாளர் விக்னேஷ், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.சுந்தரராஜன், சிஐ டியு மாவட்ட துணைச் செயலாளர் வி.பாண்டி யன் உட்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டு கேக் வெட்டி வெற்றி முழக்கங்கள் எழுப்பினர்.