கோவை, ஜன.21- அவனியாபுரம் ஜல்லிக்கட் டில் ஆறுதல் பரிசு பெற மறுத்த மாணவி யோகதர்சினியின் காளை கோவை ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்று தங்க காசை பரி சாக வென்றது. மதுரை மாவட்டம், ஐராவத நல்லூரை சேர்ந்த முத்து என்ப வரது மகள் யோகதர்ஷினி. அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டி ருக்கிறார். யோக தர்ஷினியின் தந்தை பாரம்பரியமாக விவசா யம் செய்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப் பிலும் ஈடுபட்டு வருகிறார். சிறு வயது முதலே தந்தையுடன் சேர்ந்து காளைகளை பராம ரிக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்ட யோகதர்ஷினிக்கு ஜல்லிக் கட்டில் ஆர்வம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் அவனியாபுரம் ஜல்லிக்கட் டில் தான் வளர்த்த காளையை களமிறக்கினார் யோகதர்ஷினி. அப்போது அவரது காளை பிடி மாடாக போனது. அப்போது அவ ரது ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக விழாக் குழுவினர் சிறப்பு பரிசுதர அழைத்தனர். ஆனால், அதனை வாங்க மறுத்து யோகதர்ஷினி அங்கிருந்து வெளியேற முயன்றார். இதைத் தொடர்ந்து விழாவில் சிறப்பு விருத்தினராக பங்கேற்க வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, அவரை பரிசு வாங்கிச் செல்லும் படி மைக்கில் கூறினார். ஆனா லும், பரிசினை வாங்காமல் சென்று விட்டார் யோகதர்ஷினி. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைர லானது. முன்னதாக, கடந்தாண்டும் இதே போல் அவனியாபுரம் ஜல் லிக்கட்டில் யோகதர்ஷினி தனது காளையை களமிறங்கிய போது விழாக்குழுவினர் பரிசு வழங்க அழைத்தனர். அப்போதும் அத னைப் பெற மறுத்து காளை யோடு வெளியேறினார். அன் றைய தினம் வருவாய் துறை அமைச்சராக இருந்த ஆர்.பி. உதயகுமார் மைக்கில், யோக தர்ஷினியை பரிசு வாங்குவதற் காக அழைத்த போதும் அதனை ஏற்காமல் அவர் சென்றார். இந்த நிலையில், முத்து கருப்பு என்ற தனது காளையை கோவை ஜல்லிக்கட்டில் முதன் முறையாக பங்கேற்க அழைத்து வந்தார் யோகதர்ஷினி. 529 ஆவது மாடாக யோகதர்ஷினி யின் காளை முத்து கருப்பு களம் இறங்கியது. அப்போது யார் கைகளிலும் பிடிபடாமல் துள்ளி குதித்து ஓடியது. இதனால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டு யோகதர்ஷினிக்கு சில்வர் அண்டா மற்றும் ஹாட் பாக்ஸ் பரிசாக அளிக்கப்பட்டது. மேலும், அவரை ஊக்குவிக் கும் வகையில் தங்க காசு பரிசாக அறிவிக்கப்பட்டது. இதனை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழங்க யோகதர்ஷினி பெற்று சென்றார். இதுகுறித்து யோக தர்ஷினி கூறும்போது, கடந்த 6 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டில் காளைகளை பங்கேற்ற செய்து வருவதாகவும், அலங்காநல் லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக் கட்டு போட்டிகளில் தனது காளை பங்கேற்று உள்ளதாக வும் கூறினார். முதல் முறையாக கோவை ஜல்லிக்கட்டில் தனது காளை பங்கேற்று பரிசுகளை வென்றது மகிழ்ச்சியளிப்பதாக யோகதர்ஷினி தெரிவித்தார்.