districts

img

தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலி

நாமக்கல், பிப்.20- சேந்தமங்கலம் பகுதியில் தெரு நாய்கள் கடித்து நான்கு  ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி பொட்ட ணம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நாச்சியூர் கிராமத்தில் சுமார்  150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர், விவசாய பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர். இவர்கள் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்த கிராமத்தில், கடந்த சில தினங்களாக தெருநாய்கள், தெருவில் செல்லும் ஆடுகளை கடித்துக் கொன்று விடுவதாக, அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இந்நிலையில், ஞாயிறன்று, அப்பகுதி யில் உள்ள கிராமப்புற பகுதி ஒன்றில், இரை தேட சென்ற  நான்கு ஆடுகளை, நாய்கள் சுற்றி வளைத்து கடித்தது. இதில்,  நான்கு ஆடுகள் இறந்தது. மேலும், தெரு நாய்களை விரட்டிய பொது மக்களையும் நாய்கள் கடிக்க வந்ததால், பொதுமக்கள் அச்சத்தில் ஓடினர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கூட இதே  போன்று, பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை நாய்கள் கடித்துள் ளது. தொடர்ந்து இதே நிலை நீடிப்பதால் தெருவில் செல்லவே குழந்தைகள், முதியோர், பெண்கள் என அனைத்து தரப்பின ரும் அச்சப்படுவதால் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.