districts

img

அடுத்தடுத்து ஆடுகள் பலி; விவசாயிகள் போராட்டம்

திருப்பூர், நவ.19 - ஊத்துக்குளி வட்டத்தில் தெரு நாய்கள் கடித்து அடுத்தடுத்து ஆடு கள் பலியானதால் விவசாயிகள் வட் டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்குளி வட்டம், இச்சிப்பா ளையம் கிராமத்தில் பழனிச்சாமி என் பவர் ஆட்டுப்பட்டியில் செவ்வா யன்று அதிகாலை தெரு நாய்கள் புகுந்து மூன்று ஆடுகளை கடித்துக்  கொன்று விட்டன. மேலும் 4 ஆடுக ளுக்கு காயம் ஏற்பட்டுவிட்டன. இதே போல் கடந்த இரு தினங்க ளுக்கு முன்பு வரப்பளையத்தில் ஒரு  விவசாயி ஆட்டுப்பட்டியில் இருந்த 4  ஆடுகளை தெரு நாய்கள் கொன்று  விட்டன. பாப்பம்பாளையத்தில் கோபால் என்பவரது பட்டியில் நுழைந்து 11 ஆடுகளை கொன்று  விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிர்வாகம் எவ் வித இழப்பீடும் வழங்காமல், தெரு  நாய்களை கட்டுப்படுத்தவும் நடவ டிக்கை எடுக்காமல் இருந்த நிலை யில் விவசாயிகள் ஆத்திரமடைந்த னர்.  இச்சிப்பாளையம், சர்க்கார் கத் தாங்கண்ணி கிராம விவசாயிகள் செவ்வாய் அன்று இறந்த 3 ஆடுக ளைக் கொண்டு வந்து ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டாட்சியர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங் குவதற்கு பரிந்துரை செய்து அர சுக்கு கடிதம் அனுப்புவதாக உறுதி  அளித்தார். மேலும் சம்பந்தப்பட்ட பகுதி கால்நடை மருத்துவர்கள் இறந்த ஆடுகளை உடற்கூறு ஆய்வு  செய்து சான்றிதழ் வழங்கவும் அறி வுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள் போராட் டம் முடிவுக்கு வந்தது.