ஈரோடு, நவ.3- தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத் தில் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்ப டாமல் உள்ள 8 கிராம் தங்கத்தை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் தோ.வில்சன் தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திருமண உதவி திட்டத்தில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றுத்திற னாளிகளுக்கு வழங்கப்படாத 8 கிராம் தங்கம் வழங்கப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை வேண்டி யும், கடும் ஊனமுற்றோர் உதவித் தொகை வேண்டியும் விண்ணப்பித்து 6 மாதங்களாக காத்துள்ளவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். காவல் நிலையங்கள், நீதி மன்றங்களில் தடையற்ற சூழல், சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இக்கூட்டத்தில் அகில இந் திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், மாநில பொதுச் செயலாளர் பி.ஜான்சி ராணி, மாநில பொருளாளர் கே.ஆர்.சக் ரவர்த்தி, மாநில துணைத்தலைவர் பாரதி அண்ணா, மாநிலச் செயலாளர் ஜீவா மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.