தருமபுரி, செப்.20- அனுபவ நிலம் மற்றும் குடியிருப்புக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் பாலக்கோடு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றி யத்திலுள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் 200 நாட்கள் வேலையும், ரூ.600 தினக்கூலியும் வழங்க வேண்டும். ஊரக வேலை திட்டத்தின் நிதியை பிற பணிகளுக்கு மடைமாற்றம் செய்வதை கைவிட வேண்டும். கலைஞரின் மகளிர் உரி மைத்தொகையை ஏழை மக்கள் அனைவருக் கும் வழங்க வேண்டும். காரிமங்கலம் ஒன்றி யத்தில் உள்ள ஜக்க சமுத்திரம், பிக்கன அள்ளி, ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சியில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வன நில சாகுபடி நிலங்களுக்கு சர்வே நெம்பர், 451-ல் பட்டா வழங்க வேண்டும். குண்டாங்காடு ரேசன் கடையில் இருந்து பிரித்து, முத்துராயன் கோவிலூர் கிராமத்தில் புதிய ரேசன் கடை ஏற்படுத்த வேண்டும். குண்டாங்காடு தலைமையிடமாக கொண்டு ஜிட்டான்டஅள்ளி, ஜக்க சமூத்திரம் ஊராட்சி யில் உள்ள மலை கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சி உருவாக்க வேண்டும். மலைப் பகுதியில் உள்ள ஐந்து ஊராட்சிகளை பாலக்கோடு ஒன்றியத்தில் இணைக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஜி.பாண்டியம்மாள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாவட்டத் தலைவர் கே.கோவிந்த சாமி, ஒன்றியச் செயலாளர் சி.ராஜா ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட் டச் செயலாளர் எம்.மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க ஒன் றியச் செயலாளர் பி.முருகன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் வி.காரல் மார்க்ஸ் உட் பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சங்க தலைவர்கள் பாலக்கோடு வட்டாட்சியர் ராஜாவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.