districts

img

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பங்கு மகத்தானது

திருப்பூர், ஜன.27- இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பங்கு மகத்தானது 20 ஆவது திருப்பூர் புத்தக திருவிழா நிகழ்ச் சியில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகு மார் பேசினார்.  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும்  பின்னல் புக் டிரஸ்ட் நடத்தும் 20 ஆவது  திருப்பூர் புத்தகத் திருவிழா வியாழக் கிழமை தொடங்கியது. புத்தகத் திருவி ழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சி எஸ்ஆர்வி எக்ஸ்போர்ட்ஸ் எஸ்.பாலு சாமி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சி யில் ‘நேர் படப்பேசு’ என்ற தலைப்பில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசி னார்.  இதைத்தொடர்ந்து எரிக தீ எழுக தீ  என்ற தலைப்பில் எழுத்தாளர் பாரதி  கிருஷ்ணகுமார் பேசுகையில், இந்திய  சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகள்  போராடிய பாதை ஒன்று என்றால் நேதாஜி போராடிய பாதை வேறு ஒன்று.  அதேபோல, பகத்சிங் பாதை ஒன்று, படேல் போராடிய பாதை வேறு. கடந்த  கால வரலாற்றை இன்றைய காலகட்டத் துடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. உல கத்தின் எந்த நாட்டின் சுதந்திரப்போராட் டமும் ஒரே பாதையில் நடைபெற்றது கிடையாது. இந்தியாவின் விடுத லைக்கு வெவ்வேறு காலகட்டங்களில் போராடிய அனைவரையும் போற்று வது தான் முறையாகும். காந்தி 84 மாதங் கள் சிறையில் இருந்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பங்கு மகத்தானது.  கடந்த கால வர லாற்றை அந்தந்த காலத்துடன் தான் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமே தவிர,  இன்றைய விஞ்ஞான காலகட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது, என்றார். திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வெள்ளியன்று நடைபெற்ற இந்நிகழ்ச் சியில் இரா.வினோதாரணி, ஏகேஆர்  அகடெமி முதல்வர் கணேசன், திருப்பூர்  ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செய லாளர் எஸ்.திருக்குமாரன் உட்பட பலர்  பங்கேற்றனர்.