districts

img

விளையாட்டு உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு வேண்டும்

சேலம், ஜன.24- தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் பங் கேற்க விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நிதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாரா ஒலிம்பிக் கிளப்த்ரோ விளையாட்டு வீரர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பாரா ஒலிம்பிக் விளையாட்டில் ஒரு அங்கமாக விளையாடப்படும் கிளப் த்ரோ விளையாட்டு தேசிய அளவில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் மேட்டூரை சேர்ந்த மூன்று வீரர்கள் பங்கேற்று மாநில அளவில் முதல் பரிசு மற்றும் மூன்றாம் பரிசுகளை வென்றுள்ளனர். அவர்களுக்கு பூனேவில் நடைபெறும் தேசிய அள விலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விளையாட்டு உபகர ணங்கள் மற்றும் நிதி உதவி அளிக்க  வேண்டும் என மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுசம்பந்தமாக விளையாட்டு வீரர்கள் அலெக்சாண்டர், பிரபா கரன், மற்றும் கௌதம் ஆகியோர்  செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, மாற்றுத்திறனாளியாக இருக்கும் நாங்கள் கடந்த நான்கு  ஆண்டுகளாக பழனி என்பவரின் முயற்சியால் பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது மாநில அளவில் கிளப் த்ரோ மற்றும் 100 மீட்டர், 400 மீட்டர் பந்தயங்களில் வெற்றி பெற்று தேசியளவில் போட்டிக்கு தேர்வாகி உள் ளோம். ஆனால், தற்போது தேசியளவில்  நடைபெறும் விளையாட்டுப் போட்டி பூனேவில் நடைபெற உள்ளது. அதில், பங்கேற்க தங்களிடம் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சென்றுவர நிதி இல்லாத காரணத்தால் மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.