சேலம், பிப்.15- முத்தரப்பு கூட்டத்தில் அளித்த வாக்குறுதிப்படி, மரவள்ளிக்கிழங்கு பாயிண்ட்க்கு ரூ.300 வழங்க வேண் டும், என வலியுறுத்தி சேலத்தில் மர வள்ளிக்கிழங்கு விவசாயிகள் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், தருமபுரி, கள்ளக் குறிச்சி உட்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு பிரதான பணப்பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு ரூ.16 ஆயிரம் வரை கொள் முதல் விலை கிடைத்த நிலையில், தற்போது ரூ.5 ஆயிரம் சரிவு ஏற் பட்டுள்ளது. இப்பிரச்சனையில் அரசு உரிய கவனம் செலுத்த வேண் டும். விவசாயிகள் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கடந்த பிப்.5 ஆம் தேதியன்று சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில், சேகோ அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பாயிண்ட்க்கு ரூ.300 என்ற வகை யில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வில்லை. ஜவ்வரிசிக்கு உரிய விலை கிடைக்காததால் மரவள்ளிக் கிழங்கு விலை வீழ்ந்திட காரணம் என்றும், சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஜவ்வரிசி முழு வதும் சேலத்தில் பரிசோதனை செய்து வணிகம் செய்யாமல் வெளி மார்கெட் வணிகத்தில் விலையை குறைத்து விற்பதால் மரவள்ளி கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந் துள்ளது. மரவள்ளி ஸ்டார்ச் பொருட்கள் இறக்குமதி கம்போடி யாவிலிருந்து செய்யப்படுகிறது. இதற்கு வரி 50 சதவிகித்திலிருந்து 5 சதவிகிதமாக ஒன்றிய குறைத்துள் ளது. இதனால் பெரிய இழப்புகள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. குறிப் பாக, ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கம் போடியா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்ப டும் ஸ்டார்ச் உள்ளிட்ட மரவள்ளி யால் உருவாக்கப்படும் பொருட் களுக்கு மீண்டும் 50 சதவீதம் இறக்குமதி வரியை ஒன்றிய அரசு விதிக்க வேண்டும். தற்போது மர வள்ளிக்கிழங்கு அறுவடை செய் யப்படும் காலகட்டமாக இருப்ப தால், பாயிண்ட்க்கு ரூ.300 என்ற, முத்தரப்பு கூட்டத்தில் பேசியபடி வழங்க வேண்டும், என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் வெள்ளியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், குரங்கு சாவடி பகுதியிலுள்ள சேகோ சர்வ் தலைமை அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாவட் டச் செயலாளர் ராமமூர்த்தி, துணைத்தலைவர் பி.தங்கவேலு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் எஸ்.செல்லப்பன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட் டச் செயலாளர் பி.அரியாக் கவுண்டர், ஐக்கிய விவசாய சங்க நிர்வாகி அரங்க.சங்கரய்யா, விவ சாயிகள் நல சங்க நிர்வாகி கோவிந் தராஜ் உட்பட பலர் கலந்து கொண் டனர்.