districts

img

தாராபுரத்தில் இலவச கண்சிகிச்சை முகாம்: 300 பேர் பங்கேற்பு

தாராபுரம், ஜன.21- திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில்  சாலை பாதுகாப்பு வார விழாவை யொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இதில் ஓட்டுநர், நடத்துநர்கள் உட்பட்  300 பேர் பங்கேற்றனர். மோட்டார் வாகன ஆய்வாளர் அலு வலகத்தில் நடைபெற்ற இந்த முகாம் கோவை லோட்டஸ் கண் மருத்து வமனை சார்பில் நடைபெற்றது. இலவச  கண் சிகிச்சை முகாம், ரத்த பரிசோ தனை, கண் ரத்த அழுத்த பரிசோதனை  ஆகியவை நடைபெற்றன. இந்த முகாமை தாராபுரம் போக்குவரத்து அலுவலர் சி.செந்தில்குமார் தொடங்கி  வைத்தார். வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் முன்னிலை வகித்தார். கோவை லோட்டஸ் மருத்துவமனை முதுநிலை கண் பரிசோதகர்  நிவேதா, வட்டாரப் போக்குவரத்து அலு வலக நேர்முக உதவியாளர் ராஜாரா மன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெ. செந்தில்குமார்  ஆகியோர் முகாமை  ஒருங்கிணைத்தனர். இதில் 300க்கும்  மேற்பட்ட ஓட்டுநர்கள் நடத்துனர்கள்  மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பரி சோதனை மேற்கொண்டனர். பரிசோத னையில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப் பட்ட 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கி, உயர்  சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் சாலை விதிகள் குறித்து அச்சி டப்பட்டுள்ள புத்தகம் மற்றும் துண்டு பிர சுரங்களை ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர்  குமரேசன்  வழங்கினார். சாலை விதிமுறைகள்  குறித்தும் விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.