அம்மாபாளையம் தொடக்கப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்
திருப்பூர், செப். 21 - திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி அம் மாபாளையம் தொடக்கப் பள்ளியின், மாணவ, மாணவிக ளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி) மற்றும் திருப்பூர் தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து இந்த முகாமை பள்ளி வளா கத்தில் நடத்தினர். முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராம கிருஷ்ணன் தலைமை ஏற்றார். பள்ளி எஸ் எம் சி தலைவர் ஈஸ்வரி வரவேற்றார். திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார் கண் பரிசோதனை முகாமை தொடக்கி வைத்தார். இந்த முகாமில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 406 மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோ தனை செய்யப்பட்டது. முகாமில் திருப்பூர் தி ஐ ஃபவுண்டேஷன் மக்கள் தொடர்பு அதிகாரி சரவண குமார் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்றனர். இதில் கண்ணில் அதிகம் குறைபாடு இருந்த 21 மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடி அணிய பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முகாமிற்கான ஏற்பாடுகளை அம்மா பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எஸ் எம் சி உறுப்பினர்கள் சஃபியுல்லா, ஞான சௌந்தரி, ஜோதி, கார்த் திகா, கீர்த்திகா, செல்வ புவனேஸ்வரி, ஆசிரியர் பிரதிநிதி முத் துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் எஸ் எம் சி உறுப்பினர் ரமேஷ் நன்றி கூறினார்.
ஓடை கரையை ஆக்கிரமித்து வீட்டுமனைகள் அமைப்பு இடத்தை மீட்க மர்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
திருப்பூர், செப்.21- காங்கேயம் வட்டம், நத்தக்காடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஓடை கரை அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் வீட் டுமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தை நில அளவை செய்து மீட்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நத் தக்காடையூர் ஊராட்சி கிளைச் செயலாளர் ஆர்.செல்வராஜ், இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கும், தாராபுரம் வரு வாய் கோட்டாட்சியருக்கும் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நத்தக்காடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு ஓடை நிலம் சர்வே எண் 380, 381 இல் அருகாமையில் பழைய கோட்டை ஊராட் சிக்கு உட்பட்ட பகுதியில் அபி கார்டன் என வீட்டுமனை விற்பனை செய்வோர் ஆக்கிர மித்துள்ளனர். குறிப்பாக நத்தக்காடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தையும் ஓடை கரையையும், ஸ்ரீ கரிய காளியம்மன் கோவி லுக்கு செல்லும் வழித்தடத்தையும் ஆக்கிர மித்து நுழைவாயில் அமைத்து வீட்டுமனை என விற்பனை செய்யப்படுகிறது. அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள் ளதாக தெரிவதால், அரசு நிலம் எவ்வளவு உள்ளது, நத்தக்காடையூர் ஊராட்சி எல்லை எதுவரை உள்ளது என்பதை அளந்து எல்லை வரை வருவாய்த்துறை மூலம் காட்டப்பட்டு எல்லை கல் அமைக்க வேண்டும். மேலும் நத்தக்காடையூர் ஊராட்சி வடக்கு பகுதியில் ஒரே ஒரு ஆழ்குழாய் தான் உள் ளது. பாரதியார் நகர் ஆதிதிராவிடர் காலனி, அர்ச்சுனா நகர் காலனி, புதுச்சக்கர பாளை யம் பகுதியில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆழ்குழாய்கிணறு அமைத்தா லும், சாயக் கழிவுநீர் காரணமாக நல்ல குடிநீர் கிடைப்பதில்லை. அத்துடன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 800க்கும் மேற் பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு போதிய குடிநீர் வசதியை ஏற்படுத்தி தரும் பொறுப்பு நத்தக்காடை யூர் ஊராட்சிக்கு உள்ளது. எனவே மேற்கண்ட ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தில் மீட்டு பொதுக் கிணறு அமைக் கப்பட்டு, மின் இணைப்பு பெறப்பட்டுள்ள நிலையில், போர்க்கால அடிப்படையில் குடி நீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். மேலும், அபி கார்டன் வீட்டுமனை பிரிவு நிலம் விற் பனை செய்யும் தனி நபர்கள் நத்தக்காடை யூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு நிலத்தை ஆக் கிரமித்து உள்ளதை வருவாய்த்துறை மூலம் மீட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நத்தக்காடையூர் கிளை சார் பில் கேட்டுக் கொள்வதாக செல்வராஜ் கூறி யுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் தொடர் திருட்டு: நால்வர் கைது
திருப்பூர், செப். 21 - திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து வீடுகளில் திருடிய 4 பேரை போலீ சார் சனியன்று கைது செய்தனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் இந்த 4 பேர் மீதும் 75 க்கும் மேற்பட்ட வழக் குகள் நிலுவையில் உள்ளன என்று தெரிய வந்தது. திருப்பூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அபிஷேக் குப்தா கூறியதா வது, திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், உடுமலை காவல் நிலைய எல்லைக ளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆக. 27 ஆம் தேதி முதல் செப்.1 ஆம் தேதி வரை, பூட்டியிருந்த வீடுகளை நோட்ட மிட்டு, 16 வீடுகளை உடைத்து, 45 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்து 22 ஆயிரம், 30 பட்டு சேலைகள், தலா 2 வெள்ளி மற்றும் வெண்கல குத்து விளக்குகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை திரு டப்பட்டன. இந்த தொடர் குற்றச்சம்ப வங்கள் குறித்து, மேற்கண்ட காவல் நிலையங்களில் மொத்தம் 16 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன. மேற்கு மண் டல காவல்துறை தலைவர் செந்தில்கு மார் உத்தரவின்படி, கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் ஆலோசனையின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மேற்பார்வையில், 3 காவல் ஆய் வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து சம்ப வம் நடைபெற்ற பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை தொடர்ந்தது. சத்தீஸ்கர் மாநிலம் சத்ரபதி சிவாஜி ஜெகதல்பூர் தீட்கர கோட்டையை சேர்ந்த முருகன் சிவகுரு (45), சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அம்மையாக ரத்தை சேர்ந்த ராஜா (40), அதே பகுதி தியாக துருவத்தை சேர்ந்த சுரேஷ் (34) மற்றும் சித்தாலூர் பனைங் கல்லை சேர்ந்த தங்கராஜ் (55) ஆகி யோர் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் தனிப் படை போலீசார் சனியன்று கைது செய்து, 32 பவுன் நகை, 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் ஆகி யவற்றை பறிமுதல் செய்தனர். இவர் கள் மீது திருப்பூர் மாவட்டம் மட்டு மின்றி திண்டுக்கல் மாவட்டத்தில் 5 வழக்குகள், கன்னியாகுமரி மாவட் டத்தில் 1 வழக்கும் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மொத்தமாக 25 வழக்கு களில் 97 பவுன் நகைகள், ரூ. 8 லட்சத்து 71 ஆயிரம், 5 இருசக்கர வாகனங்கள் திருடியிருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிமன்ற காவ லுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நீதி மன்ற அனுமதியுடன் தொடர் விசார ணைக்கு எடுத்து விசாரிக்கப்படும். ராஜா மற்றும் தங்கராஜ் மீது 19 வழக்கு களும், சுரேஷ் மீது 15 வழக்குகள் மற்றும் முருகன் சிவகுரு மீது 20 க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் 4 பேர் மீது மொத்தமாக 75 க்கும் மேற்பட்ட வழக்கு கள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது, என்றார். இந்த கொள்ளை கும் பலை பிடித்த காவல் ஆய்வாளர்கள் சோமசுந்தரம், கோபாலகிருஷ்ணன், விவேகானந்தன் ஆகியோர் கொண்ட குழுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட் டது.
முடிவுற்ற திட்டப்பணிகள் திறந்து வைப்பு
திருப்பூர், செப்.21- திருப்பூர் மாவட்டம், உடு மலைப்பேட்டை நகராட்சி மத்திய பேருந்து நிலை யத்திற்கு முன்பாக நகராட்சி பொதுநிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் முடி வுற்ற திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் வெள்ளின்று திறந்து வைத்தார். உடுமலைப்பேட்டை நகராட்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நக ராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தலைவர்கள் நினைவு பூங்கா, நமக்கு நாமே திட்டத் தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ள ஜல் லிக்கட்டு நினைவு சதுக்கம், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நீரூற்று பூங்கா மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக் கப்பட்டுள்ள அசோகா ஸ்தூபி என மொத்தம் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட் டப்பணிகளை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் திறந்து வைத் தார். இந்நிகழ்ச்சியில், பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப் பினர் க.ஈஸ்வரசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தேர்வு
ஈரோடு, செப். 21- ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் நடை பெற்று, செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூர், மீன வர்தெரு கிளையின் 12 ஆவது மாநாட்டில் கிளைச் செய லாளராக எம்.ராமதாஸ், கிருஷ்ணாபுரம் -ஆண்கள் கிளையின் 8 ஆவது மாநாட்டில் கிளைச் செயலாளராக டி. மாரியப்பன், பெண்கள் கிளைச் செயலாளராக எம்.மகேஸ்வரி, பர்கூர்மலை, முள்ளிக்காடு கிளைச் செயலா ளராக கே.ராஜீ, தேக்கன்காடு கிளைச் செயலாளராக வெ.சின்னச்சாமி, தவுட்டுப்பாளையம் கிளைச் செயலா ளராக எஸ்.சார்லஸ்ராஜா, கள்ளிமடைக்குட்டை கிளைச் செயலாளராக ஆர்.கணேசன் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். அந்தியூர் நகர சிறு வியாபாரிகள் ஆண்கள் கிளைச் செயலாளராக கே.ஏ.குருசாமி, பெண்கள் கிளைச் செயலாளராக எஸ்.மயில், மந்தை மாரியம் மன் கோயில் வீதி பெண்கள் கிளைச் செயலாளராக எஸ். கீதா, புதுப்பாளையம் கிளைச் செயலாளராக ஜி. ராணி, க.மேட்டூர் கிளைச் செயலாளராக ஆர்.மாரியப் பன், பாலக்குட்டை கிளைச் செயலாளராக எஸ்.சித்தாயி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூடுமைனூர் கிளைச் செயலாளராக எஸ்.மாரி முத்து, கோவிலூர் கிளைச் செயலாளராக ஏ.மணி, ஓசைபட்டி கிளைச் செயலாளராக ஓ.எஸ்.பாட்டை யன், ஈரோடு, சூரம்பட்டிவலசு கிளைச் செயலாளராக எஸ்.சிவஞானம், சத்தியமங்கலம் நகரக்கிளைச் செய லாளராக பி.வாசுதேவன் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.
மக்கள் சந்திப்பு இயக்கம்
சேலம், செப்.21- சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர், சேலம் மாநகரப் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் களை தமிழ்நாடு அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் சனியன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கோட்டை உள்ளிட்ட பகு திகளில் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர். சங் கத்தின் செயலாளர் கே.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், மாநில துணைத் தலைவர் டி.செல்வராசு, நிர்வாகிகள் நாகராசு, பெரு மாள், விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு
சேலம், செப்.21- சேலம் மாவட்ட நிர்வாகம் ஏற்கெ னவே வாக்குறுதி அளித்தபடி, வெள் ளையம்பட்டி பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி, மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், பொன்னம்மா பேட்டை வடக்கு ரயில்வே லைன் பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் வெள்ளி யன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர். இதன்பின் அவர்கள் கூறுகை யில், பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே 100 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தங் ளுக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந் நிலையில், ரயில்வே நிா்வாகத்தினர் தங் களை வெளியேறுமாறு அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதற்கு மாற்றாக, வெள்ளையம்பட்டி பகுதியில் வீட்டுமனை வழங்குவதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர். ஆனால், தற் போது அந்த இடத்தை வழங்க இய லாது எனவும், அதற்கு மாற்றாக, சேலத் தாம்பட்டியில் நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடு வழங்குவதாகவும், அதற்காக குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என வும் வருவாய்த் துறையினா் தெரிவிக் கின்றனர். இந்த பணத்தை செலுத்தும் அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி, வெள்ளையம் பட்டி பகுதியில் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் சார்பில் நேரு நகர், களரம்பட்டி மற் றும் ஜான்சன்பேட்டை ஆகிய இடங்க ளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடி யிருப்புகளில், எவ்வித பணமும் செலுத் தாமல் குடியிருப்பு வழங்க வேண்டும், என்றனர்.
துர்நாற்றம் வீசும் இலக்கியம்பட்டி ஏரி'
தருமபுரி, செப்.21- இலக்கியம்பட்டி ஏரியில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளில், சுமார் 10 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இங்குள்ள இலக்கியம்பட்டி ஏரி, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழி வுநீர், ஏரியில் கலக்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரி எப்போ தும் பாசம் படிந்தே காணப்படும். ஏரியில் கழி வுநீர் கலப்பதால் ஏரிக்கரையை ஒட்டியுள்ள வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில், துர்நாற்றத்துடன் தண்ணீர் வருகிறது. இத னால் இப்பகுதி பொதுமக்கள் பொது குழாய் தண்ணீரையும், வாட்டர் கேன் குடிநீரையும் பயன்படுத்தி வருகின்றனர். ஏரி முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளாக கிடப்பதால் ஏரி துர்நாற்றம் வீசுகிறது. ஏரியில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை அப்பு றப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி கூறுகையில், இலக் கியம்பட்டி ஏரிக்கு வாய்க்கால் மூலம் வரும் குப்பைகள், ஏரிக்குள் சேர்ந்து விடுகிறது. இந்த குப்பைகளை தூய்மையே சேவை திட் டத்தின் கீழ், இலக்கியம்பட்டி ஊராட்சி நிர்வா கம் மூலம் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது, என்றார்.