உடுமலை, நவ.30- அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாண வர்களுக்கான தேசிய வருவாய் வழி திறன றித் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் உடு மலையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்க உடுமலை கிளை சார்பில் உடுமலை பசுபதி வீதியில் அமைந்துள்ள மீனாட்சி திருமண மண்டபத் தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது வார பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. காலை 10 முதல் 10.30 மணி வரை மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடைபெற்றது. மேலும் மன திறன் கணிதம் மற்றும் ஏழாம் வகுப்பு முதல் பருவத்திற்கான கணிதம் சார்ந்த பாடப் பகுதிகளை கிளுவன் காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சந்திரசேகர் நடத்தினார். அதைத் தொடர்ந்து மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வர லாற்று பட்டதாரி ஆசிரியர் சுப்பிரமணியம் ஏழாம் வகுப்பு, முதல் பருவ சமூக அறிவியல் பாடங்களில் படிப்பறிவுத் திறன் சார்ந்து பயிற்சி அளித்தார். பின்னர் வாளவாடி அறிவி யல் பட்டதாரி ஆசிரியர் கவிதா ஏழாம் வகுப்பு முதல் பருவ அறிவியல் பாடங்களில். படிப்ப றிவுத் திறன் சார்ந்து பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி முழுவதும் ப்ரொஜெக்டர் மூலம் வினாக்களுக்கான விடைகள் மாணவர்க ளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. உடுமலை அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடை பெற்ற பயிற்சி வகுப்பிற்கு 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 52 மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்புகள் தொடர்ச்சியாக 10 வாரங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் நண்பகல் 1.15மணி வரை நடைபெறுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும்படி தமிழ்நாடு அறி வியல் இயக்கம் உடுமலைப்பேட்டை கிளை மாணவர்களையும் பெற்றோர்களையும் கேட்டுக்கொள்கிறது. பயிற்சி வகுப்புகளை ஆசிரியர்கள் செல்லத்துரை, ஈஸ்வரசாமி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.