திருப்பூர், ஜூலை 31- முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் என்று கூறி மாற்றுத் திறனாளிகளிடம் ரூ.14 லட்சம் மோசடி செய் தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பழனிசாமி என்பவர் உட்பட மாற்றுத்திற னாளிகள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, நான். மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பட்டியலின மக்களுக்கு மத்திய, மாநில அரசு கள் வழங்கும் இலவச பட்டாக்களை பெற்று தந்து வந்தேன். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்லடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் உதவியாளர் என்று கூறி சங்கர் என்பவர் என்னிடம் இருந்து 150 விண்ணப்பங்களுக்கு பட்டா பெற்று தருவதாக கொஞ்சம் கொஞ்சமாக ரூபாய் 14 லட்சம் வசூலித்தார். ஆனால் பட்டா ஏதும் பெற்று தரவில்லை. இதையடுத்து திருப்பூர் வட்டாட்சியரை சந்தித்து சங்கர் பட்டா வாங்கி தருவதாக கூறி என்னிடம் பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றி விட்டார் எனவும், பொதுமக்கள் என்னிடம் பணத்தை திரும்ப பெற்று தர சொல்லி கேட்கிறார்கள் எனக் கூறினேன். ஆனால் சங்கர் எனக்கு யாரும் பணம் தரவில்லை, நான் யார் என்றே தெரியாது எனவும் கூறிவிட்டார். அதன் பிறகு தான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. எங்களை ஏமாற்றிய சங்கரை அழைத்து விசாரணை செய்து எங்களிடமிருந்து அவர் வாங்கிய ரூ.14 லட்சத்தை மீட்டுத் தர வேண்டும் என்று பழனிச்சாமி கூறியுள்ளார்.