கோவை, ஜூன் 7- ஆன்லைன் மூலம் ரூ.7.90 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து கோவை குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையி னர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
கோவை மாவட்டம், போத்தனூர் ரயில் நக ரைச் சேர்ந்தவர் ஜெயம்மாள் (48). இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த சில நாட்க ளுக்கு முன்பு, ஆன்லைன் மூலம் அதிக மாக சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் வந் துள்ளது. இதையடுத்து ஜெயம்மாள் அதி லுள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து விவரங்களை தேடியபோது, அவரை கைப்பேசி எண் ணுக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரி யாத நபர், “நீங்கள் டெலிகிராம் குழுவில் இணைந்து நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தில் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம்” என கூறியுள்ளார். இதனை நம்பிய ஜெயம்மாள் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு வெவ்வேறு கட்டங்களாக ரூ.7,90,500 செலுத்தியுள்ளார். ஆனால், அவருக்கு எந்த விதமான லாபத்தொகை யும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சிய டைந்த ஜெயம்மாள் அந்த நபரை தொடர்பு கொண்டு கேட்டபோது, மொத்தமாக ரூ.10 லட்சம் செலுத்தினால் மட்டுமே லாபம் மற் றும் அசல் தொகையை திரும்பப்பெற முடி யும் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த ஜெயம்மாள் இதுகுறித்து கோவை மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.