கோவை, ஏப்.5- கோவையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து டிபன் கடைக்காரரிடம் ரூ.70 ஆயிரத்தை அபேஸ் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை ரெட்பீல்டு ரோட்டை சேர்ந்தவர் ஜான் சேவியர் (52), இவர் டிபன் கடை உரிமையாளர். சம்பவத்தன்று ஜான் சேவியர் புலியகுளம் தாமு நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஏடி எம்., மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அங்கு அவர் 3 கட்டங்களாக ரூ.14 ஆயிரம் எடுத்தார். அப்போது திடீரென அவரது ஏடிஎம், கார்டு மெஷினில் சிக்கி கொண்டது. இதைப் பார்த்த அங்கிருந்த நபர் ஒருவர் ஜான் சேவியருக்கு உதவ முன் வந்தார். அவர் மெஷினில் சிக்கிய ஏடிம் கார்டை வெளியே எடுக்க வேண்டும் என கூறி ரகசிய எண்ணை கேட்டு பெற்றார். பின்னர் ஜான் சேவியருக்கு தெரியாமல், அவரது ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக வேறு ஒரு ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தில் அவரது ஏடி எம் கார்டில் இருந்து ரூ.70 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. இத னால், அதிர்ச்சியடைந்த ஜான் சேவியர் வங்கி கிளைக்கு சென்று விசாரித்தார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.70 ஆயிரம் பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து ஜான் சேவியர் ராமநாதபுரம் போலீசில் அளித்த புகா ரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ரூ.70 ஆயிரம் மோசடி செய்த நபரை தேடி வருகின்ற னர்.