districts

img

ஆர்எஸ்எஸ் பாஜகவை வீழ்த்த நான்கு முனை போராட்டம் அவசியம்

திருப்பூர், டிச. 6 - இந்திய அரசியல் சட்டத்தை தகர்க்கும் வேலையில் ஈடுபட்டு வரும் ஆர்எஸ்எஸ் பாஜ கவை வீழ்த்த தேர்தல் பணி மட்டும் போதாது.  கருத்தியல், அரசியல், அமைப்பு பணிகளு டன் சேர்ந்து தேர்தல் களத்திலும் என நான்கு  முனைகளில் போராடுவதன் மூலம் அவர் களை வீழ்த்த முடியும் என்று மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி கூறி னார். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் “அரசியல் சாசன விழுமி யங்களும், கம்யூனிஸ்டுகள் பங்களிப்பும்” என்ற 10 நாள் தொடர் வகுப்பின் ஏழாம் நாள்  அமர்வு செவ்வாய்கிழமை நடைபெற்றது. மாதர் சங்க நிர்வாகி இ.அங்குலட்சுமி தலை மையில் நடைபெற்ற இந்த அமர்வில் “அரசி யல் சாசனமும், இன்றைய சவால்களும்” என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி உரையாற்றி னார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய  அரசியல் சாசனம் நான்கு முக்கியமான தூண்களின் மீது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூக நீதி, சுய சார்பு என்பதே அந்த நான்கு தூண்கள். இந்த  நான்கு அம்சங்களுமே தற்போது ஆளும் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் கும்பலால் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வரு கின்றன.

இத்தாலிய கம்யூனிஸ்ட் தலைவர் அந் தோணியா கிராம்ஷி கூறுகையில், பாசிசம்  அதிகாரத்துக்கு வந்தவுடனேயே அரசு நிர்வா கத்தை சீர்குலைக்கும் வேலையில் ஈடுப டாது. முதலில் அரசின் ஒட்டுமொத்த நிர்வாக  இயந்திரத்தையும் முழுமையாக கைப்பற்றிக்  கொள்ளும் என்று கூறினார். அதேபோல் பாசி சம் மேற்கொள்ளும் நெடும் பயணம் என்பது அரசின் அனைத்து கட்டமைப்பையும் முழு மையாக கைப்பற்றிக் கொள்வதே ஆகும். இந்தியாவில் தற்போது அதிகாரத்தில் உள்ள பாஜக அரசு, பாசிசத்தை நோக்கி பய ணித்துக் கொண்டிருக்கிறது. அது  இந்து ராஷ்டிராவை கட்டமைக்க முயற்சிக்கிறது. அதற்காக அரசியல் சாசனத்தை சீர்குலைக் கும் வேலையைச் செய்கிறது. குறிப்பாக மதச் சார்பற்ற ஜனநாயகத்தை சீர்குலைக்க திட்ட மிட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்திய  சமூகத்தில் இயல்பாகவே மதச்சார்பின்மை யின் கூறுகள் இருக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பண்பாடு.  ஆனால், இந்துத்துவம் என்ற கருத்தியல் மதம்  சார்ந்ததல்ல. அது அரசியல் கருத்தியல். பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை   சிறுபான்மை மக்களுக்கு எதிராகத் தூண்டிவி டுவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்று ஆர்எஸ்எஸ், பாஜக செயல்படுகிறது. இது இந்தியாவின் மதச் சார்பற்ற ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக, ஆபத்தாக உள்ளது.

அதேபோல், அரசியல் சாசனத்தின் அடித் தளமான நாட்டின் சுயசார்பு என்பதும் கடும்  தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்தியா வின் சுயசார்பு என்பது பொருளாதார இறை யாண்மையை அடிப்படையாகக் கொண் டது. ஆனால், இந்தியாவின் பொருளாதார சுய சார்பைத் தகர்க்கும் வகையில் பாஜக செயல் பட்டு வருகிறது. மக்களாட்சியைத் தகர்க்கும்  வேலையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன் றத்தின் நிலைக்குழுக்களுக்கு சட்டமியற்று வதற்கு முந்தைய மசோதாவை அனுப்புவது கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டுள்ளது. மோடியின் முதல் ஐந்தாண்டு காலத்தில் ஏறத்தாழ 40 சதவிகிதம் மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் இரண்டாவது ஆட்சிக் காலமான தற்போது 10 சதவிகிதமாக குறைந்து விட் டது. முதலாளித்துவம் எப்போதெல்லாம் தோல்வி அடைந்து, நெருக்கடியைத் தீர்க்க முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கும்போது தன் னுடைய தோல்வியை மறைக்க முகமூடியை  மாட்டிக் கொள்ளும். அந்த முகமுடியைக் கழற்றினால் உள்ளே தோல்வி அடைந்த முத லாளித்துவத்தின் முகம் இருக்கும்.   

நவீன தாராளமயம் என்ற கொள்கையின் மூலம் பொதுத்துறையை சீர்குலைத்து தனி யார் மயப்படுத்துகின்றனர். இந்தியாவின் திட்டக் கமிஷனை கலைத்து விட்டு நிதி  ஆயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ள னர். திட்டக் கமிஷன் இருக்கும்போது மாநில  அரசுகள் தங்களது கோரிக்கைகளை அங்கு  முன்வைத்து உரிய பலன் பெற முடியும். ஆனால் நிதி ஆயோக்கில் அப்படிச் செய்ய  முடியாது. அதிகாரக் குவிப்பை நோக்கி செயல்ப டக்கூடிய ஆட்சியாளர்களுக்கு அதிகாரப் பர வல் ஏற்க முடியாதது. எனவேதான் அதிகாரப்  பகிர்வுக்கு வாய்ப்பளிக்கும் திட்டக்குழுவை  கலைத்து விட்டனர். நிதி ஆயோக்கை உரு வாக்கி உள்ளனர். அந்த அமைப்பு அனைத்து திட்டங்களையும் நுண் திட்டங்களாக மாற்றி  செயல்படுகின்றனர்.  இந்த நுண் திட்டங் களைச் செயல்படுத்துவதன் மூலம் நூற்றுக் கணக்கான கிராமங்களில் பொருளாதாரத் துடன், அவர்களது அரசியலை கொண்டு செல்கின்றனர். இந்துத்துவ வகுப்புவாதம், கார்ப்பரேட் பெருமுதலாளிகள் ஆதரவு கொள்கை என  இரண்டும் இந்திய அரசியல் சாசனத்தை தகர்க்கும் வகையில் மூர்க்கத்தனமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய மக்கள் சார்பாக இதை எதிர்த்து கருத்தியல்,  அரசியல், அமைப்பு சார்ந்த போராட்டங்க ளுடன் தேர்தல் போராட்டமும் நடத்த வேண் டும். இந்த நான்கு பணிகளையும் ஏக காலத் தில் நடத்தி நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு ஆர்.பத்ரி கூறினார். இந்த  வகுப்பில் திரளானோர் கலந்து கொண் டனர்.