கோயம்புத்தூர், மார்ச் 24- கோவையில் தமிழ்நாடு பொது மேடை அமைப்பின் சார்பில், ‘மோடி ஆட்சி தொடரலாமா?’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடை பெற்றது. இதில், தபெதிக பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன், திராவிட விடுதலைக்கழக தலை வர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற இக்கருத்தரங்கில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரி. பரந்தாமன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. நாடாளுமன்றத் திற்குள் நுழைந்து, வெற்றிடத்தில் குண்டு வீசினார் பகத்சிங். அதே போல 2023 டிசம்பரில் இரு இளை ஞர்கள் நமது நாடாளுமன்றத்திற் குள் வண்ண பூச்சுகளை வீசினர். இந்திய மக்களுக்கு மோடியின் - மோடி ஆட்சியின் சர்வாதிகார ஆட்சியை கவனத்திற்கு கொண்டு வரும் விதமாகவே புகைக் குப்பி களை வீசினோம் என தெரிவித்த னர்.
மணிப்பூருக்கு செல்லாத பிரதமர் நமக்கு எதற்கு?
தமிழகத்தின் மீது மோடிக்கு சமீப காலமாக காதல் வந்திருக்கி றது, வாரத்திற்கு இரண்டு முறை தமி ழகம் வருகிறார் மோடி. அதே நேரத்தில், தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற் பட்டிருந்தது, சென்னை, தூத்துக் குடி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள பொருட்களும், பணமும் மனித இழப்புகளும் ஏற்பட்டது. அப்போது, பிரதமர் மோடி வர வில்லை. மணிப்பூர் மாநிலம் எரிந்து கொண்டு இருக்கிறது. இரு இன மக்கள் மோதிக் கொண்டு இருக்கி றார்கள். மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் செல்லவில்லை. சென் னைக்கும் தூத்துக்குடிக்கும் வரா தது ஆச்சரியம் இல்லை. மணிப்பூ ருக்கு கூட செல்லாதவரை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும்.
வெள்ளத்தின் போது வராதவரை தோற்கடிப்போம்
வெள்ளத்தில் பாதிக்கபட்டவர் களுக்கு ஒன்றிய மோடி அரசு ஒரு பைசாகூட வெள்ள நிதி தரவில்லை. மெட்ரோ திட்டத்திற்காக தமிழக அரசு, ஒன்றிய அரசு சரி பாதி தொகைகளை வழங்க வேண்டும். ஆனால், அந்த மெட்ரோ திட்டத்திற் கும் நிதி வழங்காத மோடியை, ஏன் நாம் தோற்கடிக்கக் கூடாது. கல்வி மாநில பட்டியலுக்கு வழங் கப்படும் என காங்கிரஸ் சொல்லி யிருக்கிறது. அப்படி வந்தால் நீட் இருக்காது. மருத்துவக் கல்லூரி களைக் கொண்டு வந்தது எல்லாம் திமுக, அதிமுக அரசுகள். தமி ழகத்தில் ஒரு கல்லூரி கூட ஒன்றிய அரசுக்கு கிடையாது. இலங்கை யில் இருந்து அகதியாக வரும் தமிழ் மக்களுக்கு ஏன் குடியுரிமை வழங் கப்படவில்லை?
தமிழுக்கு பல்கலைக்கழகம் எங்கே இருக்கிறது?
இந்தியாவில் 20 சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் இருக்கின் றன. ஆனால், ஒன்றிய அரசு ஒரே ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் வைத்திருக்கிறதா? தமிழில் வழக் காட அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஏன் அண்ணா மலை அங்கு செல்லவில்லை. இந்த அதிகாரம் ஒன்றிய அரசிடம் தானே இருக்கிறது. மெட்ராஸ் ஹை கோர்ட்டையே இன்னும் சென்னை, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நீதி மன்றம் என ஏன் மாற்ற மாட்டோம் என்கின்றனர்.
தெருவில் நடப்பதை தடுத்தது யார்?
சேலத்தில் பேசும்போது திமுக, காங்கிரஸ் கட்சிகளை இந்துக் களை அவமதிக்கின்றனர் என்கின் றார் மோடி, மதத்தை பற்றி பிரதமர் பேசுகின்றார். வைக்கத்தில் தெரு வில் நடக்கக் கூடாது என்ற கட்டுப் பாட்டை போட்டது இந்துவா இல் லையா? அந்த வர்ணாசிரமம்தான் வேண்டாம் என்கின்றோம். இந்தி யாவில் மோடி அரசை வீழ்த்த வேண்டும் என நாங்கள் சொல்கி றோம். தமிழகத்தை பொறுத்த வரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முழுமையாக வெற்றி பெறுவதுடன், அனைத்து இடங்க ளிலும் பாஜகவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். குறிப் பாக கோவையில் அண்ணாமலை டெபாசிட் வாங்காத அளவிற்கு வீழ்த்தப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி அரி. பரந்தாமன் கூறினார்.