சேலம், நவ.10- செவ்வாய், வியாழன் கிரகங்களுக் கான பயணத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள தென, இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளனார். சேலம் மாவட்டம், உடையாப்பட்டி அருகே குண்டுக்கல்லூரில் அமைந் துள்ள நோட்டரிம் ஆஃப் ஹோலி கிராஸ் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் கண் காட்சி சனியன்று நடைபெற்றது. இவ் விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர், அறிவியல் விஞ்ஞானி கே. சிவன் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் அறிவியல் விஞ் ஞானி கே.சிவன் மாணவர்களோடு உரையாடி, அவர்களின் அறிவியல் படைப்புகளைப் பாராட்டி சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசு கையில், 2047 ஆம் ஆண்டில் ‘வளர்ச்சி யடைந்த இந்தியா’ என்ற இலக்கை நோக்கி நாடு பயணித்து வருகிறது. விண்வெளித் துறையிலும் அதற்கேற்ற வாறு பல்வேறு இலக்குகள் நிர்ணயிக் கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின் றன. சந்திரயான் மூலம் நிலவுக்குச் சென்றதுபோல செவ்வாய் கிரகத்துக் கான பயணமும் தொடங்கியுள்ளது. இதுபோல வியாழன் கிரகத்துக்கான பயணம் 2028 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 112 நாட்களில் வியாழன் கிரகத்தை அடையும் வகையில் பய ணம் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக சந்திரயான் - 4 திட் டத்தின் கீழ் நிலவுக்குச் சென்று, அங்கி ருந்து பாறை, மண் மாதிரிகளை எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா வுக்கான பிரத்யேக விண்வெளி நிலை யம் அமைக்கும் பணி 2028 ஆம் ஆண்டு தொடங்கி 2035 ஆம் ஆண்டுக்குள் முழு மையாக முடிக்க திட்டமிடப்பட்டுள் ளது. இதேபோன்று, 2040 ஆம் ஆண்டில் ககன்யான் திட்டத்தின் கீழ் நிலவுக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப் பும் திட்டம் நிறைவேற்றப்படும். இந்தத் திட்டங்கள் மூலம் விண்வெளித் துறை யில் 2047-இல் வளர்ச்சியடைந்த இந் தியா என்ற இலக்கு நிச்சயம் நிறை வேறும், என்றார்.