திருப்பூர், ஏப்.7 - திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தோழர் வீனஸ் கே.பழனிச்சாமி உடல் நலக்குறைவு காரணமாக வியாழனன்று இரவு கால மானார். திருப்பூர் - மங்கலம் சாலை, குள்ளேகவுண்டன் புதூரில் வசித்து வந்த பழனிச்சாமிக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் வியாழனன்று இரவு அவர் உயிர் பிரிந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் கூடுதல் அக்கறை கொண்டு செயல்பட்ட தோழர் பழனிச்சாமி, தன்னுடைய வீனஸ் பிரிண்டிங் தொழிற்சாலை மூலமாக திருப்பூர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதற்கும் கட்சி அணியினருக்கு கொடி, பேனர் தயாரித்து கொடுத்து வந்தார். ஆரம்ப காலத்தில் சிறியதாக தொழில் தொடங்கி, திட்ட மிட்ட கடின உழைப்பின் மூலமாக பெரிய தொழில் நிறுவன மாக உயர்த்தினார். அதேசமயம், ஆரம்பகாலம் முதல் அதே உணர்வோடு கட்சிக்கு உறுதியான ஆதரவாளராக திகழ்ந்தார். அவர் மட்டுமின்றி தன்னுடைய மகன்களையும் கட்சியின் ஆதரவாளர்களாக வளர்த்திருக்கிறார். 1978 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திருப்பூரில் மேற்கு பகுதியில் மங்கலம் வட்டாரத்தில் நடைபெற்ற விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தின் போது சிஐடியு தலைவர்கள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
அப்போது சங்கத்திற்கும் தோழர்களுக்கும் உறுதியாக துணை நின்றார். அந்தப் போராட்டத்தின் போது 17 தொழிலாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டு இடித்து சிதைக்கப்பட்டது. அவர்களது வீடு களை புனரமைப்பதற்கு தன்னுடைய மதிப்பு வாய்ந்த பங்க ளிப்பைச் செலுத்தினார். தீக்கதிரின் வளர்ச்சிக்கு இவருடைய பங்களிப்பு மகத் தானதாகும். திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வரும் திருப்பூர் புத்தகத் திரு விழா நிகழ்ச்சிகளுக்கு சிறந்த பங்களிப்பை செய்தவர். வயதான நிலையிலும், உடல் நலம் பாதிக்கும் வரை தொடர்ச்சியாக தனது ஆலைக்கு வருகை தந்து விடுவார். திருப்பூரில் தொழில் நிலை, உலகளாவிய தொழில்நுட்ப மாற்றம், பொருளாதார, அரசியல் நிகழ்வுகளை கருத்தூன்றி கவனித்து வந்தார். இவரது மறைவுச் செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உன்னி கிருஷ்ணன், எம்.ராஜகோபால், எஸ்.சுப்பிரமணியன் மற்றும் திருப்பூரில் பல்வேறு பகுதியில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகி யோர் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். வெள்ளியன்று காலை அவரது இறுதி நிகழ்ச்சி நடை பெற்றது.