districts

img

சிபிஎம் தலைமையில் பாதிக்கப்பட்டோர் ஆட்சியரிடம் புகார்

ஈரோடு, ஜன.3- அந்தியூர் அருகே சாலையை ஆக்கிர மித்து பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்த முன்னாள்  டிஎஸ்பி-யை கைது செய்ய வேண்டும், என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி தலைமை யில் பாதிக்கப்பட்டோர் ஆட்சியர் அலுவல கத்தில் புகாரளித்தனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், நக லூர் கிராமம், குண்டுமூப்பனூரில் வசிக்கும் பட்டியலின மக்கள் குடியிருப்பில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மின்விளக்குகள் அமைக் கப்பட்டன. இந்நிலையில், இக்குடியிருப்பை ஒட்டியுள்ள தோட்டத்து உரிமையாளரும், ஓய்வுபெற்ற துணை காவல் கண்காணிப்பா ளருமான முத்துசாமி என்பவர், மின்கம்பங் கள் தனது இடத்தில் நட்டிருப்பதாகக்கூறி ஊராட்சி தலைவரையும், ஊர் மக்களையும் வசைபாடி, பொக்லைன் இயந்திரத்தை வைத்து அனைத்து மின் கம்பங்களையும் அகற்றியுள்ளார். அதன்பிறகு அரசு அதி காரிகள் அத்துக்கற்கள் நட்டனர். ஆனால், முத்துசாமி மற்றும் அவரது குடும்பத்தினர், பட்டியலின மக்களை சாதி ரீதியாக திட்டி, அத்துக்கற்களை அகற்றியுள்ளனர். மேலும், இதுகுறித்து கேட்ட அப்பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டும், இதுவரை காவல்  துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை.  இந்நிலையில், அப்பகுதி மக்கள் வெள்ளி யன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்குப் புறப்பட ஆயத்தமாகினர். இதனையறிந்த அதிகார வர்க்கத்தினர் அவர்களைத் தடுத்து கைது செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்தி யதால், பாதிக்கப்பட்ட மக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு மாவட்ட காவல் அலுவலகத்திற்குச் சென்று அங்கும் போராட்டம் நடத்தவிருப்பதாகத் தவறான தகவல் மாவட்ட காவல் அலுவ லகத்திற்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இதனால் மாவட்ட காவல் அலுவ லகத்திலும் காவல் துறையினர் குவிக்கப் பட்டு கைது செய்ய வாகனம் உள்ளிட்ட ஏற் பாடுகளோடு இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தலை மையில் ஈரோடு மாவட்ட காவல் அலுவல கத்திற்கு வந்தனர். நடந்த விபரங்களை காவல் கண்காணிப்பாளரிடம் மனுவா கக் கொடுத்து பேசினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்து, முத்துசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும், என வலியுறுத்தினர். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பி.பழனிசாமி, கே.ஆர்.விஜயராகவன், எஸ்.வி.மாரிமுத்து, அந்தியூர் தாலுகா செய லாளர் ஆர்.முருகேசன், தாலுகா கமிட்டி  உறுப்பினர்கள் ஏ.கே.பழனிசாமி, செபாஷ்டி யன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.பால சுப்பிரமணி, பா.லலிதா மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பி னர் நர்மதா ஆகியோர் உடனிருந்தனர்.