districts

தோழர் எஸ்.ஆறுமுகம் மறைவு: சிஐடியு இரங்கல்

கோவை, பிப். 16- இந்திய தொழிற்சங்க மையத்தின்  முன்னாள் கோவை மாவட்டச்செய லாளரும், மாநில நிர்வாகியும், சிபிஎம் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.ஆறுமுகம் மறைவிற்கு, சிஐ டியு கோவை மாவட்டக் குழு இரங்கல்  தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளி யிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரி வித்துள்ளதாவது, சிஐடியுவின் அகில இந்திய நிர்வாகக் குழு, மாநில நிர்வாகி,  கோவை மாவட்டச் செயலாளர்,  ஏ.பி.டி குரூப் கிளைகளில் ஸ்தாபன  தலைவர்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கோவை மாவட்ட செயற் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட பணி யாற்றியவர். தொழிற்சங்க இயக்கத் தில் பல்வேறு சங்கங்களுக்கு வழி காட்டியவர். கடந்த 55 ஆண்டுகளாக வர்க்க நலன்களுக்கான போராட்டங்க ளில் இறுதி வரை அர்ப்பணித்து பணி யாற்றியவர். எளிய குடும்பத்தில் பிறந்து, எஸ்எஸ்எல்சி வரை படித்து,   குடும்ப பொருளாதாரம் காரணமாக 1970  ஆம் ஆண்டுகளில் பிளம்பர் வேலை செய்யத் துவங்கி,  திருச்சி சாலை எல்.ஜி. பி நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, பின்னால் 1975 ஆம் ஆண்டு ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் பணிக்கு சேர்ந்தார். தொழிலாளர்கள் கோரிக்கைக்காக 1976 ஆம் ஆண்டு அங்கு சங்கம் துவங்கி, 1978 சி.ஐ.டி யுடன் இணைக் கப்பட்டது. அச்சங்கத்திற்கு ஸ்தாபன பொதுச்செயலாளராக இயங்கினார். செங்கொடி இயக்கத்தின் தலைவர் களான வி.பி.சிந்தன், கே.எம்.ஹரிபட், கே.வேணுகோபால், கே.ரமணி, எம். நஞ்சப்பன் ஆகியோருடன் பணியாற் றிய அனுபவம் பெற்றவர். இன்றுவரை  ஏ.பி.டி சங்கத்தின் கௌரவத் தலைவராக  பணியாற்றியுள்ளார். கடந்த 55 ஆண்டு காலம் பொதுவாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்டவர். கடைசியாக கலந்து கொண்ட கூட்டம் ஏபிடி சங்க கூட்டமாகும். இவரின் இணையர் ராணி அவர்கள் மாதர் சங்கத்திலும், கட்சிப் பொறுப்பிலும் நீண்ட காலம் பொறுப்பிலிருந்து பணியாற்றியவர். தனது குடும்பத்தையும், கட்சியில் ஈடு படுத்தி கொண்டு கட்சி குடும்பமாக பய ணித்தவர். ஆத்துப்பாலம், குனியமுத் தூர், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிக ளில் சிறுபான்மை மக்களுடனும், அடித் தட்டு உழைக்கும் மக்களுடன் கட்சிப் பணிகளை முன்னெடுத்தவர். மக்கள் ஒற்றுமைக்கான போராட்டத்தில் முன் னின்ற இவரது இழப்பு, உழைக்கும் மக் களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.  அண்ணாரின் மறைவிற்கு சிஐ டியு செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதே போல் தோழர் எஸ். ஆறுமுகம் மறைவிற்கு சிஐடியு மாநிலக் குழு, திருப்பூர் மாவட்டக் குழு இரங்கல்  தெரிவித்துள்ளது.  முன்னதாக மறைந்த தோழர் எஸ்.ஆறுமுகம் அவர்களின் சுந்தராபுரம் இல்லத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட மாவட்டத்தலைவர்களும், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், சிஐடியு மாநிலத்துணைத்தலைவர் எம். சந்திரன், சிஐடியு கோவை மாவட்டத் தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி மற்றும் மாவட்ட நிர் வாகிகளும், சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி மாவட்டச்செயலா ளர் கே.ரங்கராஜ், தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக் கம், சிபிஎம் கோவை மாமன்றக்குழு தலைவர் வி.இராமமூர்த்தி உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர். அண்ணா ரது இறுதி நிகழ்வு திங்களன்று (இன்று)  காலை 10 மணிக்கு, ஆத்துப்பாலம் மின் மயானத்தில் நடைபெறும். அங்கு  இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது.