ஈரோடு, செப்.29- டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மாதர் சங்கத்தினர் மீது பதியப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம், மூலப்பாளை யத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு மூலப்பாளையம் பெட் ரோல் பங்க் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போராட்டக்காரர் மீது 2018 மார்ச் 19 தேதியன்று ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் அமைந்த ஜேஎம் கோர்ட் 1ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு வியாழனன்று வழங்கப்பட்டது. இதில் சங்கத்தின் நிர்வாகிகள் கோமதி, பி.எஸ்.பிரசன்னா, பா.லலிதா, ஆர்.கே.சரஸ்வரி, செல்வி, காவ்யா, பழனி யம்மாள் ஆகிய 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.