districts

img

குறுமலை செட்டில்மென்டில் புதிய பள்ளி கட்டிடம்

திருப்பூர், டிச. 7- உடுமலை அருகே குறுமலை செட்டில் மென்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட மாவட்ட  நிர்வாகம் நிதி ஒதுக்கி இருக்கும் நிலையில் 15  சென்ட் இடம் வழங்குவது என்று மாவட்ட வன  உரிமை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில், செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் வினித்  தலைமையில் மாவட்ட அளவிலான வன  உரிமை குழு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், காட்டுப்பட்டி, மாவடப்பு,  பொருப்பார், ஆட்டுமலை செட்டில்மென்ட் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத இதர மரபு  வழி மலைவாழ் மக்களுக்கான வன உரிமை சட்டம் 2006 அமல்படுத்துதல் தொடர்பாகவும் மற்றும் குறுமலை செட்டில்மென்ட் பகுதியில் 15 சென்ட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட அனுமதி அளித்தல் தொடர்பாக விவாதிக்கப் பட்டது.  இராவணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பட்டி செட்டில்மென்ட் 36 விண்ணப் பங்களில் 35 நபர்களுக்கு விவசாய நிலத்திற் கான வன உரிமை ஆவணம் மற்றும் 34 நபர்க ளுக்கு குடியிருப்பு பகுதிக்கான தனிநபர்  உரிமை ஆவணமும் வழங்க தீர்மானிக்கப் பட்டது. மாவடப்பு செட்டில்மென்டில் 84  விண்ணப்பங்களில் 81 நபர்களுக்கு குடியி ருப்பு பகுதிக்கான தனிநபர் உரிமை ஆவண மும் மற்றும் 79 நபர்களுக்கு விவசாய பகுதி  நிலத்திற்கான வன உரிமை ஆவணமும் வழங்க தீர்மானிக்கப்பட்டது.  உடுமலைபேட்டை வனச்சரகம் மானுப் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மலைவாழ்  மக்கள் இடமான ஆட்டுமலைப் பகுதியில் 14  நபர்களுக்கு விவசாய நிலத்திற்கான வன உரிமை ஆவணமும் மற்றும் 4 நபர்களுக்கு குடியிருப்பு பகுதி வன உரிமை ஆணவமும்  வழங்க தீர்மானிக்கப்பட்டது.

பொருப்பார் செட்டில்மென்ட் பகுதியில் 8 நபர்களுக்கு விவ சாய நிலத்திற்கான வன உரிமை ஆவணம்  வழங்க தீர்மானிக்கப்பட்டது. உடுமலைப் பேட்டை வட்டம் இதர மரபு வழி மலைவாழ்  மக்கள் பகுதியான குறுமலை செட்டில்மென் டில் ஏற்கனவே வனத்துறை மூலம் கட்டப்பட்ட  ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட் சியர் உத்தரவின் பெயரில் புதிய பள்ளி கட்டி டம் மற்றும் வளாகத்தில் கழிவறை, சமைய லறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொள்ள ரூபாய்  21.80 லட்சம் மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி  பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து உடுமலைப்பேட்டை வட் டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளதன் பெயரில் குறுமலை செட்டில்மென்ட் பகுதி யில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு ஏது வாக 15 சென்ட் நிலம் வழங்க தீர்மானிக்கப் பட்டது.  இக்கூட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் குப்புசாமி,  மாவட்ட செயலாளர் செல்வன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், வன உரிமை குழு தலைவர் காட்டுபட்டி பச்சையன், கோடந்தூர் மாரியப்பன், ஈசல்திட்டு சுப்பிர மணியன், மாவட்ட வன உரிமை குழு உறுப்பி னர் கோபால் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.