திருப்பூர், ஏப்.25 - திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தொடர்பாக மாநில வனத்துறை அமைச் சர் மா.மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக காங்கேயம் பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாநில வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்று ஊதியூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம், அதைப் பிடிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். அதன்பிறகு ஊதியூர் மலைப் பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். காங்கேயம் வட் டம், ஊதியூர் பகுதியில் கடந்த மார்ச் 3ஆம் தேதி அன்று சிறுத்தை மக்களை அச்சுறுத்தியும், கால்நடைகளை தாக்குவ தாகவும் தகவல் வந்தது. இதையொட்டி வனத்துறையின் மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியதில் சிறுத்தை கால் தடங்கள் பதிவாகியது. மேலும், மார்ச் 14 அன்று ஒரு கன் றுக்குட்டியையும், மார்ச் 15 அன்று மீண்டும் ஒரு கன்றுக்குட்டி யையும் தாக்கிய தகவல் வந்தது. இதையொட்டி சிறுத்தை யின் கால்தடம் பதிவான இடம், பொதுமக்கள் பார்த்ததாக கூறிய பகுதிகள் என 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டது. இந்த கேமராக்களில் பதிவாகியுள்ளதை வைத்து 6 முதல் 7 வயதுடைய சிறுத்தை என்பதை அறிய முடிந்தது. இந்த சிறுத்தையைப் பிடிக்க 4 கூண்டுகள் வைக்கப்பட் டுள்ளன. 2 ரோன் கேமராக்கள் பயன்படுத்தி தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறது. மார்ச் 22 அன்று ஒரு நாயை தாக்கி யது கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சிறுத்தையை பிடிப்பதற்காக 20 வனத்துறை பணியா ளர் மற்றும் அலுவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். 10 வனச்சரகர்கள், 10 வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் 3 பழங்குடியின மக்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கண்டிப்பாக கூடிய விரைவில் சிறுத்தையை பிடிக்கப்படும் அல்லது காட்டுப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் மா.மதிவேந்தன் நம்பிக்கை தெரிவித்தார்.