districts

img

நீலகிரியில் ஒரே நாளில் 10 இடங்களில் காட்டுத்தீ

உதகை, மார்ச் 4 - நீலகிரியில் ஒரே நாளில் 10 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் 200 ஏக்கர் நிலம் காட்டு தீயால் பாதிப்படைந்து உள்ள தாக வனத்துறையினர் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில், நவம்பர் மாதம்  முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு நீடிக்கும். குறிப்பாக உதகை மற்றும் சுற்றுப்புற  பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். இதுபோன்ற சமயங்களில் வனப்பகுதிகள் மற்றும் விளைநிலங்கள் பசுமையை இழந்துவிடும். அப்போது ஆங் காங்கே காட்டு தீ ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், உதகையில் கடந்த 3 மாத மாக பெய்த உறைபனி வனப்பகுதி முழு வதும் கருகி காணப்படுகிறது. வனப்பகுதி யில் தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முன்  எச்சரிக்கை நடவடிக்கையாக தீ தடுப்பு கோடுகள் கடந்த சில நாட்களாக அமைக்கும்  பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. ஆனாலும்  கடந்த 10 நாட்களாக நீலகிரி வனப்பகுதியில்  தினசரி மாறிமாறி தீ விபத்து ஏற்பட்டு வரு கிறது. இந்நிலையில், வெள்ளியன்று காலை 11  மணியளவில் கவர்னர் சோலை, பார்சன்ஸ்வேலி பகுதியில் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டது. கடத்த 2 நாட்களாக நீலகிரியில்  காலநிலை மாறி நன்றாக காற்று வீசி வருவ தால் இந்த காட்டுக்கு  மள மள வென வேகமாக  பரவியது. இந்த தீ இரவு வரை கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது. இதுகுறித்து, தகவல் அறிந்த தீய ணைப்பு துறையினர் மற்றும் வனத்துறை யினர் காட்டுத் தீயை அணைக்கும் பணியில்  ஈடுபட்டனர்.

ஆனாலும் தீ கொழுந்து விட்டு  எரிந்ததால் அவர்களால் தீயை நெருங்கி  செல்ல முடியாமல் திணறினர். வனப்பகுதி யில் ஏற்பட்ட இந்த காட்டு தீ காரணமாக சுமார் 100 ஏக்கரில் மரங்கள் செடிகள் எரிந்து  சாம்பல் ஆனது. இதேபோல, குன்னூர் ஜெகதலா பகுதி யில் தீ விபத்து ஏற்பட்டு வனப்பகுதி மரங்கள்  பாதிக்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை வேலிவியூ, லவ்டேல் லாரன்ஸ் பள்ளி, எச்.பி.எப்., பைகாரா, வாழைத்தோட்டம் உள்பட மாவட்ட முழு வதும் 10 இடங்களில் காட்டு தீ ஏற்பட்டது. வேலிவியூ பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக ஊட்டியில் இருந்து குன்னூர் சென்ற ரயில் லவ்டேல் சந்திப்பில் நிறுத்தப் ்பட்டு 1½ மணி நேரம் தாமதமாக சென்றது. குன்னூரில் இருந்து வந்த ரெயில் கேத்தியில்  நிறுத்தப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக உதகை வந்தது. தீட்டுக்கல் குப்பைகுழி பகுதியில் ஏற் பட்ட தீ விபத்து காரணமாக உதகையில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார விநியோகம் ரத்தானது. இதன் பின்னர் மின்சார ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மின் விநியோகத்தை சரி செய்தனர்.  மாவட்டம் முழுவதும் தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர், மின்சாரத் துறையினர் என சுமார் 150 பேர் இந்த பணி களில் ஈடுபட்டனர். கடந்த ஒரு வார காலமாக ஏற்பட்டு வரும்  தீ விபத்து காரணமாக இதுவரை 200 ஏக்கர் வனப்பகுதி எரிந்து உள்ளதாக வனத்துறை யினர் தெரிவித்தனர்.