சேலம், ஜூன் 2- ஆத்தூர் அருகே உள்ள ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க அதிகளவில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் கட்டுப்ப டுத்த முடியாமல் திணறிய வனத்துறையினர், அனைவரையும் திரும்பி அனுப்பினர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட முட்டல் கிராமம், கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆணைவாரி நீர்வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி வனத்துறையின் சூழல் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. முட்டல் ஏரியில் படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் வசதி வனப்பகுதியில் பொழுது போக்கும் வகையில் குடில் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்ய ப்பட்டுள்ளன. இங்கு ஆத்தூர் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம் விழுப்பு ரம், கடலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள், வருகை தந்து விடுமுறை நாட்களில் தங்க ளது குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் ஆத்தூர் சுற்றுவட் டார பகுதிகளில் பெய்த கனமழை காரண மாக ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து வருவதாலும், ஞாயிறன்று விடுமுறை நாள் என்பதாலும் காலை முதலே அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வந்தனர். மேலும் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளிக்க அனுமதி அளித்திருந்தனர். இந்நிலையில், அதிகளவு சுற்றுலாப் பயணிகளை வனத்துறை மற்றும் காவல்து றையினரால் கட்டுப்படுத்த முடியாதால் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி மறுத்து அனைவரையும் வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது. மேலும், பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.