தருமபுரி, செப்.9- விடுமுறை நாட்களில் பணி செய்ய நிர்பந்திப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி நெடுஞ் சாலைத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங் களையும் நிரப்ப வேண்டும். நீண்ட காலமாக வெளியிடப்படாமல் உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களது முதுநிலைப் பட்டியலை உடனடியாக வெளி யிட வேண்டும். ஆட்சி அலுவலர் மற் றும் முதன்மை பணி அலுவலர் பதவி உயர்வு, கோட்டக் கணக்கர்க ளுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் சொந்த வருவாய் வட்டத் தில் பணிபுரிய உரிய ஆணை வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை யின் மிக முக்கிய பணியிடமான பதி வுரு எழுத்தர் பணியிடங்களை வேலை வாய்ப்பகம் மூலம் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படை யில் பணி நியமனம் கோரி காத்தி ருக்கும் அனைவருக்கும் சிறப்பு நிகழ்வாக கருதி, அவர்களிடமி ருந்து விருப்ப கடிதத்தினை பெற்று உடனடியாக பணி வழங்க வேண் டும். பிறத்துறைகளில் உள்ளது போல், கலந்தாய்வு மூலம் பணி மாறுதல், பதவி உயர்வு வழங்க வேண்டும். விடுமுறை நாட்களில் பணி செய்ய நிர்பந்தம் செய்வதை கைவிட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எம்.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் எம்.கிருஷ்ணன் கோரிக் கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலை வர் கோ.பழனியம்மாள் சிறப்புரை யாற்றினார். இதில், அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட இணைச்செய லாளர் குணசேகரன், வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ஜெய வேல், முன்னாள் நிர்வாகிகள் ஏ. சேகர், சி.காவேரி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், நெடுஞ்சா லைத்துறை ஊழியர் சங்க மாவட் டப் பொருளாளர் பாலாஜி நன்றி கூறினார்.