districts

img

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

கோபி, நவ.27- உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொடி கோபி அருகே  உள்ள கூகலூரில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்களை திமுக சார்பில் வழங்கினர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கூகலூரில் திமுக  மற்றும் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி திமுக பேரூர் செயலாளர் ராஜாராம் தலைமையில் வடக்கு மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார் முன்னிலை யில் புதனன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கூகலூர் குளத்துகடை, தண்ணீர்பந்தல்புதூர், தலைகொம்புதூர் உள் ளிட்ட அரசு பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட பள்ளி  குழந்தை களுக்கு கூகலூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி மாரப்பன் மற்றும் பேரூர், மாவட்ட நிர்வாகிகள் கலந்து  கொண்டு எண்சுவடி, கையேடு,  எழுதுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கல்வி உபகரணப் பொருட்களுடன், இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்வில், அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன் றிய இளைஞரணி அழகிரி, தண்ணீர்பந்தல்புதூர் டி.ஏ.பழனிச் சாமி, கோடீஸ்வரன், மல்லிகா, ரமேஷ், கார்த்திக், நல்ல சாமி, மற்றும் வார்டு உறுப்பினர்கள் செயலாளர்கள் என ஏரா ளமனோர் கலந்து கொண்டனர்.