கோவை, ஜன.8- கணபதி அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் சிலர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், தன்னுடைய விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நண்பருக்கு கொடுத்துள்ளார். இந்த நிலை யில், கேசவனின் நண்பர், அந்த இருசக்கர வாகனத்தை கணபதி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு முன்பாக நிறுத்தி இருந் தார். இரவிலிருந்து இருசக்கர வாகனம் நிற்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர், அதிகாலை மூன்று மணி அளவில் அப்பகு திக்கு வந்து, வாகனத்தின் லாக்கரை உடைத்து திருடிச் சென்றனர். இக்காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேம ராவில் பதிவான நிலையில், தற்போது காட்சி கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரு கிறது. இதுகுறித்து கேசவன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.