தருமபுரி, ஜூலை 15- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் பேரணி, ஆர்ப்பாட்டங் களில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்க ணக்கானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். தமிழக அரசின் நிரந்தர திட்டத் தில் பணியாற்றக்கூடிய சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்க ளுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகையை பணி கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்ச மும், சமையலர் உதவியாளர்க ளுக்கு 3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டபூர்வமான குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந் தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவு மையங் களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வுக்கேற்ப உணவு மானிய தொகையை குழந்தை ஒன் றுக்கு ரூ.5 உயர்த்தி வழங்க வேண் டும். பெண் ஊழியர்களுக்கு மகப் பேறு விடுப்பு சம்பளத்துடன் 12 மாத காலமாக வழங்குவது போல் சத்து ணவு பெண் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணப் பலன்களை ஓய்வுபெறும் நாளி லேயே வழங்க வேண்டும். சத்துணவு பிரிவுக்கு தனி கணினி ஆப்ரேட்டர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இயக்கத்திற்கு தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.காவேரி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலை வர் எம்.ராமன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கே.தேவகி கோரிக்கை கள் குறித்து பேசினார். இதில், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் ஏ.சேகர், பொருளாளர் கே.புக ழேந்தி மற்றும் ஜெயவேல், சண் முகம், பிரபாகரன் உள்ளிட்ட தோழமை அமைப்பின் நிர்வாகிகள் போராட்டத்தை வாழ்த்தி உரையாற் றினர். நிறைவாக தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்க மாநில செயலா ளர் பி.மகேஸ்வரி உரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் பி.வளர்மதி நன்றி கூறினார்.
கோவை
கோவை அரசு மகளிர் தொழிற் நுட்ப கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணி, கோவை வடக்கு தாலுகா அலுவலகம் அருகே நிறைவடைந் தது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே. என்.ராமசாமி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.செந்தில்குமார் பேரணி துவக்கி வைத்து உரை யாற்றினார். கோரிக்கைகள் குறித்து சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் என்.பழனிச்சாமி, முன் னாள் மாநில தலைவர் கே.பழனிச் சாமி ஆகியோர் உரையாற்றினர். தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத் தின் மாநில தலைவர் துணை தலை வர் பி.நடராஜன் மற்றும் எஸ்.ரமேஷ், எம்.சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் ஜே. நிர்மலா நிறைவுரையாற்றினார்.
சேலம்
சேலத்தில் நடைபெற்ற சத்து ணவு ஊழியர் ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்ட தலைவர் கே.தங்க வேலன் தலைமை தாங்கினார். சேலம் கோட்டை மைதானம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. பேரணியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் என். திருவேரங் கன் துவக்கி வைத்தார். இதில் சங்கத் தின் மாநில செயலாளர் பி.மகேஸ் வரி மற்றும் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.சுரேஸ், மாநில துணைத்தலைவர் சி.முருகப்பெரு மாள் சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ராஜவேலு மாநில செயற்குழு உறுப்பினர் எ.அம ராவதி உள்ளிட்டு ஆயிரத்துக்கும் மேற் பட்ட பெண்கள் பங்கேற்றனர்.