districts

img

வேலை நிறுத்தத்தில் பங்கேற்க சத்துணவு ஊழியர் சங்கம் முடிவு

கோவை, மார்ச் 2- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார் பில் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைக்காக நடைபெறும் அடையாள வேலை நிறுத்தத்தில் அனைத்து சத்துணவு ஊழியர்களும் பங்கேற்று வெற்றி பெறச் செய்வது என தமிழ்நாடு சத்துணவு ஊழியர்  சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவையில், தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தாமஸ் கிளப்பில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.கலா செய்தியாளர் களை சந்தித்து கூறுகையில், மார்ச் 10 ஆம் தேதி  மாநில அளவில் சத்துணவு திட்ட உரிமை மீட்பு பாதுகாப்பு கோரிக்கை மனுவை தமிழ் நாடு முதல்வரிடம் வழங்குவது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 12 பெருந்திரள் முறையீடு, மார்ச் 5 ஆம் தேதி ஜாக்டோ - ஜியோ சார்பாக நடைபெறும் ஒரு நாள் உண்ணாவிரதத்தில் அனைத்து ஊழியர்களும் பங்கு பெறுவது. மார்ச் 28 ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறும் அடை யாள வேலை நிறுத்தத்தில் அனைத்து சத்து ணவு ஊழியர்களும் பங்கு பெற்று வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.