திருப்பூர், ஜன.30- மக்களின் அடிப்படை பிரச்சனைகளை மையப்படுத்தி, புதனன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாநகராட்சி, 15 ஆவது வார்டு பகுதியில் அமைந் துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும். இப்பகுதி மக்களின் குடிநீர், தெருவிளக்கு, சாக் கடை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை முன்வைத்து, அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் புதனன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கிளைச் செயலாளர் கதிர்வேல் தலைமை ஏற்றார். இதில், மூத்த தோழர் எம்.பத்மநாபன், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கே.வசந்தி, நரேந்திர பிரசாந்த், முன் னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.மாரப்பன், வடக்கு ஒன்றி யச் செயலாளர் ஆர்.காளியப்பன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று, திருப்பூர் மாநகராட்சி 15 ஆவது வார்டு ஏவிபி லே அவுட் பகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை முன்வைத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏவிபி லே அவுட் கிளைச் செயலாளர் நரேந்திர பிரசாந்த் தலைமை ஏற்றார். இதில், மூத்த தோழர்கள் ராக்கி முத்து, முத்துக்குமார் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.