districts

தேர்தல் நடத்த வலியுறுத்திய பூ விவசாயிகள் கைது

ஈரோடு, ஜூன் 21- மலர் விவசாயிகள் சங்கத்திற்கு உறுப்பினர்களைச் சேர்த்து தேர்தல் நடத்தக் கோரிய விவசாயிகள் புதனன்று ஈரோட்டில் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் மலர் விவசாயம் பெருமளவில் நடைபெற்று வருகிறது. இந்த விவசாயிகள் 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் தலைமை சங்கம் என்ற சங் கத்தை உருவாக்கினர். இச்சங்கம் 2000க்கும் மேற்பட்ட மலர் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு இயங்கி வந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாக்களித்தனர். தலைவராக முத்து சாமி, செயலாளராக கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாக குழு வினர் தேர்வு செய்யப்பட்டனர். ஆண்டு தோறும் பொதுக்குழு, செயற்குழுவை நடத்து வது எனவும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வைத்து நிர்வாகிகளை தேர்வு செய்வது எனவும் விதிகள் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், விதிப்படி நடக்கவில்லை. தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தாமல்  32 பேரை  மட்டும் கொண்டு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங் கம் என்று புதிய சங்கத்தை தொடங்கியுள்ளதாக தெரிகி றது.  இதுகுறித்து கேள்வி எழுப்பிய விவசாயிகளை சந்தையில் பூ விற்க விடாமல் தடுத்துள்ளனர். காவல்துறை, வருவாய்த் துறையில் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. சங்கங்களின் பதிவாளரும் நடவடிக்கை எடுக்க வில்லை.  இந்நிலையில், 2000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான சொத்துக்களோடு, சுங்க பணத்தோடு இயங்கி வரும் சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தில் அனைத்து விவசாயிகளையும் உறுப்பினராக சேர்க்க வேண் டும். முறையாக தேர்தல் நடத்த வேண்டும்.  நடைபெற்ற ஊழல், மோசடி குறித்து புகாரின் மீது வழக்கு பதிவு  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலவரையற்ற உண் ணாவிரதமிருப்பது என மலர் விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்தனர்.  அதன்படி ஈரோட்டில் போராட்டத்திற்கு வந்த 44 பெண் கள் உள்ளிட்ட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். சத்திய மங்கலம் மற்றும் கோபியில் இதேபோல பூ விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.